ETV Bharat / state

நெடுஞ்சாலைச் சுவர்களை ஆக்கிரமிக்கும் அரசியல் கட்சியினர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை - villupuram people complaint against party paintings on government walls

விழுப்புரம்: நெடுஞ்சாலையோர சுவர்களை ஆக்கிரமித்து அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்துவருகிறதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆக்கிரமிக்கும் அரசியல் கட்சியினர்
ஆக்கிரமிக்கும் அரசியல் கட்சியினர்
author img

By

Published : Jan 27, 2020, 2:22 PM IST

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டில் பொது இடங்களில், அரசு சுவர்களில் விளம்பரம் வரைவதற்கு, பதாகைகள் வைப்பதற்கும், தனியார் இடங்களில் அனுமதியின்றி விளம்பரம் எழுதவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மேம்பால சுவர்கள், அரசு அலுவலக சுவர்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சியினர் விதிகளை மீறி விளம்பரம் செய்துவருகின்றனர்.

விரைவில் வரவுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ஆம் தேதியும் அக்கட்சியினரால் கொண்டாடப்படவுள்ளது.

நெடுஞ்சாலைச் சுவர்களை ஆக்கிரமிக்கும் அரசியல் கட்சியினர்

இதற்காக மாவட்ட அதிமுக, திமுக சார்பில் நகரின் பல இடங்களிலும், நெடுஞ்சாலையோர சுவர்களிலும் விளம்பரங்கள் வரையப்பட்டுவருகிறது. இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்தச் சுவரில் விளம்பரங்கள் எழுதும் பிரச்சனையில் அவ்வப்போது திமுக, அதிமுகவினரிடையே சண்டை ஏற்படுகிறது.

எனவே, பொது இடங்களில் விளம்பரம் எழுவதற்கு நிரந்தர தடைவிதிக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: செங்கோட்டையன் அளித்த உறுதி; போராட்டத்தைக் கைவிட்ட ராமதாஸ்! - போன் உரையாடலில் பேசியது என்ன?

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டில் பொது இடங்களில், அரசு சுவர்களில் விளம்பரம் வரைவதற்கு, பதாகைகள் வைப்பதற்கும், தனியார் இடங்களில் அனுமதியின்றி விளம்பரம் எழுதவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மேம்பால சுவர்கள், அரசு அலுவலக சுவர்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சியினர் விதிகளை மீறி விளம்பரம் செய்துவருகின்றனர்.

விரைவில் வரவுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ஆம் தேதியும் அக்கட்சியினரால் கொண்டாடப்படவுள்ளது.

நெடுஞ்சாலைச் சுவர்களை ஆக்கிரமிக்கும் அரசியல் கட்சியினர்

இதற்காக மாவட்ட அதிமுக, திமுக சார்பில் நகரின் பல இடங்களிலும், நெடுஞ்சாலையோர சுவர்களிலும் விளம்பரங்கள் வரையப்பட்டுவருகிறது. இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்தச் சுவரில் விளம்பரங்கள் எழுதும் பிரச்சனையில் அவ்வப்போது திமுக, அதிமுகவினரிடையே சண்டை ஏற்படுகிறது.

எனவே, பொது இடங்களில் விளம்பரம் எழுவதற்கு நிரந்தர தடைவிதிக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: செங்கோட்டையன் அளித்த உறுதி; போராட்டத்தைக் கைவிட்ட ராமதாஸ்! - போன் உரையாடலில் பேசியது என்ன?

Intro:விழுப்புரம்: நெடுஞ்சாலையோர சுவர்களை ஆக்கிரமித்து விழுப்புரத்தில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.


Body:உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பொது இடங்கள், அரசு சுவர்களில் விளம்பரம் வரைவதற்கும், பதாகைகள் வைப்பதற்கும், தனியார் இடங்களில் அனுமதியின்றி விளம்பரம் எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மேம்பால சுவர்கள், அரசு அலுவலக சுவர்களில் அரசியல் கட்சியினர் விதிகளை மீறி விளம்பரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் வருகிற பிப்ரவரி 24ம் தேதியும், அதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ம் தேதியும் அக்கட்சியினரால் கொண்டாடப்படவுள்ளது.


Conclusion:இதற்காக மாவட்ட அதிமுக, திமுக சார்பில் நகரின் பல இடங்களிலும், நெடுஞ்சாலையோர சுவர்களில் விளம்பரங்கள் வரையப்பட்டு வருகிறது. இதனால் சில இடங்களில் பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது.

அண்மையில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக விழுப்புரம் வருகை தந்த மு.க.ஸ்டாலினை வரவேற்று சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக, அதிமுகவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. பிரச்னை பெரிதாவதற்குள் காவல் துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

இதனால் பொது இடங்களில் விளம்பரம் எழுவதற்கு நிரந்தர தடைவிதிக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.