ETV Bharat / state

லாரி, சொகுசு பேருந்து நேருக்குநேர் மோதல் - ஓட்டுநர் மரணம்!

author img

By

Published : Sep 2, 2019, 4:10 PM IST

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே சரக்கு லாரியும் சொகுசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார், பலர் காயம் அடைந்துள்ளனர்.

lorry-bus-accident

விழுப்புரம், கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் பைபாஸ் சாலையில் நேற்று இரவு கொல்கத்தாவிலிருந்து சனல்நார் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரியும் கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பேருந்தும் நேருக்குநேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த ராஜு பலத்த அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். லாரியில் படுத்து உறங்கிக் கொண்டு வந்த கூடுதல் டிரைவர், துறையூரை சேர்ந்த தர்மலிங்கம்(46) என்பவர் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரி, சொகுசு பேருந்து நேருக்குநேர் மோதல்

சொகுசுப் பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த 35 பேரில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தியாகதுருகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் பைபாஸ் சாலையில் நேற்று இரவு கொல்கத்தாவிலிருந்து சனல்நார் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரியும் கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பேருந்தும் நேருக்குநேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த ராஜு பலத்த அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். லாரியில் படுத்து உறங்கிக் கொண்டு வந்த கூடுதல் டிரைவர், துறையூரை சேர்ந்த தர்மலிங்கம்(46) என்பவர் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரி, சொகுசு பேருந்து நேருக்குநேர் மோதல்

சொகுசுப் பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த 35 பேரில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தியாகதுருகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:tn_vpm_01_thiyagadhurgam_accident_vis_tn10026Body:tn_vpm_01_thiyagadhurgam_accident_vis_tn10026Conclusion:விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சரக்கு லாரியும் ஆம்னி சொகுசு பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் ஒருவர் பலியானார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் 20 பேர் காயம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் பைபாஸ் சாலையில் நேற்று இரவு கொல்கத்தாவிலிருந்து சனல்நார் ஏற்றிக்கொண்டு கேரளா சென்ற லாரியும், கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி சொகுசு பேருந்தும் நேருக்குநேர் மோதிக் கொண்டது. ஆம்னி பஸ் டிரைவர் தனக்கு முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதி விட்டார். இந்த சம்பவத்தில் லாரியை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த ராஜு என்கின்ற லாரி டிரைவர் பலத்த அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். லாரியில் படுத்து உறங்கிக் கொண்டு வந்த கூடுதல் டிரைவர் திருச்சி மாவட்டம் துறையூர் நாகநல்லூரை சேர்ந்த தர்மலிங்கம் வயது 46 என்பவர் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஆம்னி பஸ் டிரைவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சொகுசு பஸ்சில் பயணித்த 35 பேரில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது இவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் பின்னர் அனைவரும் அவரவர் தங்கள் விருப்பப்படி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தியாகதுருகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.