ETV Bharat / state

கணவருடன் தகராறு - குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

author img

By

Published : Sep 7, 2020, 5:15 PM IST

விழுப்புரம்: அனந்தபுரம் அருகே குடும்பத் தகராறில் தனது குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட தாய்
தற்கொலை செய்துகொண்ட தாய்

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள கீழ்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி புஷ்பா (27). இவர்களுக்கு நான்கு வயதில் மணிகண்டன் என்கிற குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று (செப்.6) இரவு புஷ்பா குளிர்சுனை என்ற கிராமத்தில் உள்ள கிணற்றில் தனது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று (செப்.7) காலை அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அனந்தபுரம் காவல் துறையினர், கிணற்றில் சடலமாக கிடந்த இருவரையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் புஷ்பா தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

இதையும் படிங்க: மனைவி தற்கொலை செய்த விவகாரம் - கணவரிடன் போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள கீழ்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி புஷ்பா (27). இவர்களுக்கு நான்கு வயதில் மணிகண்டன் என்கிற குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று (செப்.6) இரவு புஷ்பா குளிர்சுனை என்ற கிராமத்தில் உள்ள கிணற்றில் தனது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று (செப்.7) காலை அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அனந்தபுரம் காவல் துறையினர், கிணற்றில் சடலமாக கிடந்த இருவரையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் புஷ்பா தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

இதையும் படிங்க: மனைவி தற்கொலை செய்த விவகாரம் - கணவரிடன் போலீசார் விசாரணை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.