ETV Bharat / state

அரசுப்பேருந்து சரிவர இயங்கவில்லையென பெற்றோர் - மாணவர்கள் சாலை மறியல்! - பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

விழுப்புரம்: பள்ளிக்குச் செல்ல அரசுப்பேருந்து வராததையடுத்து பெற்றோருடன் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!
மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!
author img

By

Published : Jan 25, 2020, 2:21 PM IST

விழுப்புரம் மாவட்டம் சித்தால் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வருவதற்கு அரசுப் பேருந்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக அரசுப்பேருந்து சரிவர இயங்காத காரணத்தினால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து இன்று காலை பள்ளி செல்வதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து வராததையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ரிஷிவந்தியம் காவல் நிலையம் முன்பு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் சாலை மறியல்

பின்னர் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரிஷிவந்தியம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: மது பாட்டிலை காணாததால் ஆத்திரம்; அக்காவைக் குத்திக் கொன்ற தம்பி!

விழுப்புரம் மாவட்டம் சித்தால் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வருவதற்கு அரசுப் பேருந்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக அரசுப்பேருந்து சரிவர இயங்காத காரணத்தினால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து இன்று காலை பள்ளி செல்வதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து வராததையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ரிஷிவந்தியம் காவல் நிலையம் முன்பு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் சாலை மறியல்

பின்னர் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரிஷிவந்தியம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: மது பாட்டிலை காணாததால் ஆத்திரம்; அக்காவைக் குத்திக் கொன்ற தம்பி!

Intro:tn_vpm_01_risivanthiyam_school_student_saalai_mariyal_vis_tn10026.mp4Body:tn_vpm_01_risivanthiyam_school_student_saalai_mariyal_vis_tn10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சி அருகே முறையாக அரசு பேருந்து இயக்கப்படுவதில்லை எனக் கூறி மாணவர்கள் பெற்றோர்கள் சாலை மறியல் !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள சித்தால் கிராமத்தில் மாதிரி அரசு பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அரசுப்பேருந்து முறையாக இயக்கபடுவதில்லை எனக்கூறி அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ரிஷிவந்தியம் காவல் நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர் இந்த மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.