மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் மே 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து பாமகவினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிகுப்பத்தில் உள்ள காடுவெட்டி குருவின் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ராமதாஸ், இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது தமிழ்நாட்டில் பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பதில் எதுவும் சொல்லாமல் ராமதாஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.