ETV Bharat / state

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு: விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு! - PMK members protested in Villupuram

விழுப்புரம்: பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி காந்தி சிலை திரு.வி.க. சாலையில் 500-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

PMK
PMK
author img

By

Published : Jan 7, 2021, 8:18 PM IST

வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரம் முன்னாள் எம்பி கோ. தன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல் துறையின் கட்டுப்பாட்டை மீறி பாமக தொண்டர்கள் விழுப்புரம் புதுவை நெடுஞ்சாலையின் குறுக்கே வந்து மறியலில் ஈடுபட முயன்றதால் காவல் துறை, கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்
பின்னர் பாமக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி வாயிலை முற்றுகையிட்டு இட ஒதுக்கீடு கோஷங்களை எழுப்பிய நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்திய விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லசிவம் தலைமையிலான காவல் துறையினர் கட்சி முக்கிய நிர்வாகிகள் 10 பேரை மட்டும் நகராட்சிக்குள் அனுமதித்தனர். பின்னர் நகராட்சி ஆணையர் தக்ஷிணாமூர்த்தி இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதனால் நகர்ப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டதுடன், விழுப்புரம் புதுவை சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஸ்மார்ட் வண்டி கடைகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி

வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரம் முன்னாள் எம்பி கோ. தன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல் துறையின் கட்டுப்பாட்டை மீறி பாமக தொண்டர்கள் விழுப்புரம் புதுவை நெடுஞ்சாலையின் குறுக்கே வந்து மறியலில் ஈடுபட முயன்றதால் காவல் துறை, கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்
பின்னர் பாமக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி வாயிலை முற்றுகையிட்டு இட ஒதுக்கீடு கோஷங்களை எழுப்பிய நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்திய விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லசிவம் தலைமையிலான காவல் துறையினர் கட்சி முக்கிய நிர்வாகிகள் 10 பேரை மட்டும் நகராட்சிக்குள் அனுமதித்தனர். பின்னர் நகராட்சி ஆணையர் தக்ஷிணாமூர்த்தி இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதனால் நகர்ப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டதுடன், விழுப்புரம் புதுவை சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஸ்மார்ட் வண்டி கடைகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.