ETV Bharat / state

முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் நாங்கள் திமுகவினரை புறக்கணிக்கவில்லை - அமைச்சர் சி.வி. சண்முகம் - minister C V Shanmugam on Dmk criticism on admk programmes

விழுப்புரம்: முதலமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் திமுகவினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு பொய்யானது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

minister C V Shanmugam on Dmk criticism on admk programs
minister C V Shanmugam on Dmk criticism on admk programs
author img

By

Published : Aug 21, 2020, 1:28 PM IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.1.98 கோடி மதிப்பில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "தமிழ்நாட்டில் நீதிமன்றம் திறப்பது குறித்து நீதிமன்ற குழுவே முடிவு செய்யும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் கூட்டத்தில் திமுக எம்.பி, எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு பொய்யானது" என்றார்.

முதலமைச்சர் நிகழ்ச்சிகள் குறித்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் முத்தமிழ்ச்செல்வன், சக்கரபாணி, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க... திருக்கோவிலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு - அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.1.98 கோடி மதிப்பில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "தமிழ்நாட்டில் நீதிமன்றம் திறப்பது குறித்து நீதிமன்ற குழுவே முடிவு செய்யும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் கூட்டத்தில் திமுக எம்.பி, எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு பொய்யானது" என்றார்.

முதலமைச்சர் நிகழ்ச்சிகள் குறித்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் முத்தமிழ்ச்செல்வன், சக்கரபாணி, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க... திருக்கோவிலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு - அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.