ETV Bharat / state

‘பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்துகளிடம் ஒப்படையுங்கள்’ - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

author img

By

Published : Dec 25, 2019, 11:46 AM IST

கள்ளக்குறிச்சி: பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்துகளிடம் ஒப்படைக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தங்களது கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

marxist leninist party conference  Ulundurpet marxist leninist  உளுந்தூர் பேட்டை மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்  மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநாடு
பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்துகளிடம் ஒப்படைக்க மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கீழ் வெண்மணி தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு நேற்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன் வரவேற்புரையாற்றியானர். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், புதுவை மாநிலச் செயலாளர் கோ. பாலசுப்ரமணியம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் எம். வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கிராமம் மற்றும் நகர்புற ஏழைகள் வீட்டுமனை இல்லாதவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்துகளிடம் ஒப்படைக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும், முதியோர் உதவிதத்தொகையை 5000 ரூபாயாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ள நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக ஊராட்சிகள் தோறும் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்று மாநாட்டில் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!

கீழ் வெண்மணி தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு நேற்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன் வரவேற்புரையாற்றியானர். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், புதுவை மாநிலச் செயலாளர் கோ. பாலசுப்ரமணியம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் எம். வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கிராமம் மற்றும் நகர்புற ஏழைகள் வீட்டுமனை இல்லாதவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்துகளிடம் ஒப்படைக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும், முதியோர் உதவிதத்தொகையை 5000 ரூபாயாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ள நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக ஊராட்சிகள் தோறும் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்று மாநாட்டில் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!

Intro:tn_vpm_04_ulunthurpettai_markucist_lenisit_vis_tn10026.mp4Body:tn_vpm_04_ulunthurpettai_markucist_lenisit_vis_tn10026.mp4Conclusion:உளுந்தூர்பேட்டையில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவுநாளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியினர் சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது !!


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வெண்மணி தியாகிகள் நினைவு நாளில் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியின் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.இதில் மாவட்ட குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன் வரவேற்புரையாற்றினார். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், புதுவை மாநில செயலாளர் கோ. பாலசுப்பிரமணியன் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் எம். வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இதனையடுத்து கோரிக்கை மாநாட்டு தீர்மானங்கள்
தேசிய குடியுரிமை திருத்த மசோதா என்பது இப்போது தேசிய குடியுரிமை சட்டமாக மாறி
இருக்கிறது. இதை கொண்டுவந்த மோடி அமித்ஷா, ஜனாதிபதி ஒப்புதல் பெற அவர்கள் நேரத்தை
செலவிட்டார். இந்திய மக்கள் அதை நிராகரித்து கொண்டிருக்கிறார்கள். அசாமில் 20 லட்சம்
பேர் குடிமக்கள் அல்லாதவர்களாக ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இந்தியா முழவதும் 4-கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். இவர்கள்
நிலமற்றவர்கள், விவசாய தொழிலாளர்கள். எனவே, இதை ரத்து செய்திட வேண்டும்.


கிராம, நகர்ப்புற ஏழைகள் வீட்டுமனை இல்லாத குடும்பங்கள் கணக்கெடுப்பு நடத்தி 5 சென்ட்
மனை வழங்கி அதில் அரசே வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய தலித்துகளிடம் ஒப்படைக்க தணிச் சட்டம் கொண்டுவர வேண்டும்.
முதியோர், ஆதரவற்றோர், விதவைகளுக்கான தாமதமின்றி மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி
உதவித்தொகையை ரூபாய் 5000ஆக உயர்த்திட வேண்டும்.


வறுமை, வேலையின்மை , வறட்சி காரணமாக விவசாயிகள், ஏழைகள் சுயஉதவிக் குழு பெண்கள்
பட்ட கடன்களை ரத்து செய் வேண்டும். சமூகத்தை அழிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடச் செய்யவும்,அரச மருத்துவமனைகளை
வலுப்படுத்திட அனைவருக்கும்
தரமான மருத்துவம் வழங்க வேண்டும்.

வன சரகம்
ஒட்டிய விவசாய நிலத்தில் மழைநீர் புகுந்து சேதம், ஊழியர்கள் மக்களை மிரட்டி பணம் பறிப்பு
காட்டை பாதுகாக்காமல் இவர்களே அழித்துவரும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமை கொலைகள் தடுத்திட துரிதமாக நீதி தூங்க
சிறப்பு நீதிமன்றம் உருவாக்கிட வேண்டும்.
ஏரி, குளம், குட்டை ஆக்கிரமிப்பை அகற்றி நீர்வரத்து வாய்க்காலையும் ஆக்கிரமிப்பை அகற்ற
ஊழல் முறைகேடு இன்றி ஆழப்படுத்தி கரை உயாத்தி மதுகையும் சீர் அமைக்கவும், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி குடிசை மாற்று வாரியம் மூலமாக பிரதமர் அடுக்கமாடி திட்டத்தில்
உன்மையான பயனாளிகள் தேர்வு செய்து பின்னர் இட ஒதுக்கீடு மூலம் வழங்க, விண்ணப்பம்
அறிவிப்பு செய்து வெளிப்படையாக பயனாளிகள் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.
நரிக்குறவர் மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்த விட்டது.
அவர்கள் தங்க இடமின்றி பல்வேறு கிராமங்களுக்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள். எனவே
அவர்களுக்கு தொகுப்பு வீடு உடனடியாக கட்டி தரவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனவரி-8 நாடுதழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதற்கு ஆதரவு தெரிவித்து
அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக ஊராட்சிகள் தோறும் அரசு
அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என மாநாடு முடிவு செய்யப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.