ETV Bharat / state

முதியோர்களை ஏமாற்றி ஏடிஎம்மில் பணம் திருடிவந்த ஆசாமி கைது!

author img

By

Published : Aug 24, 2019, 10:00 PM IST

விழுப்புரம்: ஏடிஎம் மையத்துக்கு வரும் முதிய வாடிக்கையாளர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை திருடிவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

villlupuram

திருவண்ணாமலை மாவட்டம், எரும்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (26). இவர், பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுப்பது போன்று நடித்துவந்துள்ளார். அப்போது, ஏடிஎம் மையத்திற்கு வரும் வயதானவர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து அவர்களின் ஏடிஎம் கார்டை வாங்கி ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு பணத்தைத் திருடிவிட்டுத் தலைமறைவாகிவிடுவார்.

இதுதொடர்பாக நவீன்குமார் மீது அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் நான்கு வழக்குகளும், செஞ்சி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திண்டிவனம் காவல் நிலையத்தில் ஆறு வழக்குகளும் என மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், நவீன்குமார் குறித்து அவலூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம் காவல் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதன்படி, அவலூர்பேட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்மில் நவீன்குமார் நீலநிற தொப்பி, கைலியுடன் முதியவர் ஒருவரை ஏமாறி ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தைத் திருடுவது போல சிசிடிவி கேமரா காட்சி பதிவானது.

இதையடுத்து, அவலூர்பேட்டை உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் சாதாரண (மஃப்டி) உடையில் காவல் துறையினர் ஏடிஎம்மை நோட்டமிட்டனர்.

இதேபோன்று சுமார் இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஏடிஎம்மில் நோட்டிமிட்டுவந்த காவல் துறையினர், நீலநிற தொப்பி, கைலியுடன் ஏடிஎம் மையத்தில் நின்றுகொண்டிருந்து நபரைச் சந்தேகத்தின் அடிப்படையில் பார்த்தபோது அந்த நபர் திடீரெ ஓட ஆரம்பித்தார்.

அவரை துரத்திச் சென்று பிடித்து விசாரித்ததில் அவர் நவீன்குமார் என தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.2.77 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், எரும்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (26). இவர், பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுப்பது போன்று நடித்துவந்துள்ளார். அப்போது, ஏடிஎம் மையத்திற்கு வரும் வயதானவர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து அவர்களின் ஏடிஎம் கார்டை வாங்கி ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு பணத்தைத் திருடிவிட்டுத் தலைமறைவாகிவிடுவார்.

இதுதொடர்பாக நவீன்குமார் மீது அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் நான்கு வழக்குகளும், செஞ்சி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திண்டிவனம் காவல் நிலையத்தில் ஆறு வழக்குகளும் என மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், நவீன்குமார் குறித்து அவலூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம் காவல் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதன்படி, அவலூர்பேட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்மில் நவீன்குமார் நீலநிற தொப்பி, கைலியுடன் முதியவர் ஒருவரை ஏமாறி ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தைத் திருடுவது போல சிசிடிவி கேமரா காட்சி பதிவானது.

இதையடுத்து, அவலூர்பேட்டை உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் சாதாரண (மஃப்டி) உடையில் காவல் துறையினர் ஏடிஎம்மை நோட்டமிட்டனர்.

இதேபோன்று சுமார் இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஏடிஎம்மில் நோட்டிமிட்டுவந்த காவல் துறையினர், நீலநிற தொப்பி, கைலியுடன் ஏடிஎம் மையத்தில் நின்றுகொண்டிருந்து நபரைச் சந்தேகத்தின் அடிப்படையில் பார்த்தபோது அந்த நபர் திடீரெ ஓட ஆரம்பித்தார்.

அவரை துரத்திச் சென்று பிடித்து விசாரித்ததில் அவர் நவீன்குமார் என தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.2.77 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்யப்பட்டது.

Intro:விழுப்புரம்: விவசாயி மற்றும் முதியோர் வாடிக்கையாளரை ஏமாற்றி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த கொள்ளையனை விழுப்புரம் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.Body:திருவண்ணாமலை மாவட்டம் எரும்பூண்டி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (26).

இவர் பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுப்பது போன்று நடித்து வந்தார்.

அப்போது வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏடிஎம் மையத்திறக்கு வரும் வயதானவர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு உதவுவது போல் நடித்து அவர்களின் ஏடிஎம் கார்டை வாங்கிக்கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் உங்களுடைய ரகசிய என்னை சொல்லுமாறு கேட்டுக்கொண்டு அவர்களுக்கு தேவையான பணத்தை எடுத்து விட்டு மீண்டும் அந்த கார்டை செலுத்தி ரகசிய என்னை போட்டுவிட்டு அந்த ஏடிஎம் கார்டை திருப்பிக் கொடுத்து விடுவார்.

பின்னர்நீ ங்கள் கேட்ட பணம் வந்துவிட்டது நீங்கள் செல்லலாம் என்று அந்த முதியோர்களை அனுப்பிவிட்டு, அந்த ரகசிய எண்ணை போட்டு மீண்டும் அதிலிருக்கும் பேலன்ஸ் பணத்தை எடுத்துவிட்டு தலைமறைவாகி விடுவார்.

இந்த கொல்லை சம்பவத்தை இவர் பல்வேறு இடங்களை மாறி மாறி திருடுவது வருவது வழக்கம்.

இதுதொடர்பாக நவின்குமார் மீது அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் நான்கு வழக்குகளும், செஞ்சி காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், திண்டிவனம் காவல் நிலையத்தில் 6 வழக்குகளும் மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 11 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.

ஏடிஎம் மையத்தில் கொல்லை சம்பவத்தை தொடர்ந்து காவல்நிலையத்துக்கு தொடர் புகார் எதிரொலியாக அவலூர்பேட்டை காவல்துறை மற்றும் செஞ்சி காவல்துறை திண்டிவனம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அவலூர்பேட்டை பகுதியில் தொடர்ந்து இதுபோல் நடந்து வருவதால் அவலூர்பேட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சென்று ஏடிஎம்மில் நடக்கும் அந்த மர்ம ஆசாமி சிசிடிவி வீடியோ காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

அவர் தொடர்ந்து முதியோர்களை ஏமாற்றி பணம் எடுக்கும் காட்சிகள் அனைத்திலும் நீலநிற தொப்பி மற்றும் கைலி உடன் வந்து முதியோர்களை ஏமாற்றுவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவலூர்பேட்டை உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் சாதாரண உடையில் போலீசார் ஏடிஎம்மில் நோட்டமிட்டனர்.

இரண்டு வாரம் தொடர்ந்து ஏடிஎம்மில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது நேற்று சிசிடிவி கேமரா பதிவு செய்யப்பட்ட நபர் நீலநிற தொப்பி மற்றும் கைலியுடன் ஏடிஎம் மையத்தில் நின்று கொண்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து அவரை சந்தேகம் அடிப்படையில் பார்த்த போது திடீர் அவர் ஓட ஆரம்பித்தார்.

போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை துரத்தி பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, இவர்தான் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் என்று தெரியவந்தது.

சிசிடிவி கேமரா மூலம் அதிலிருக்கும் காட்சிகளையும் இவரும் ஒன்றாக இருந்தது தெரியவந்தத.

பிடிப்பட்ட நவீன்குமார் ஒரு வருட காலமாக கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய் மேலாக கொள்ளை அடித்துள்ளார்.

Conclusion:அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட அவலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன், கொள்ளையன் நவீன்குமாரிமிருந்து ரூபாய் 2.75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.