ETV Bharat / state

‘பொதுமக்கள் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை’ - திமுக எம்பி உறுதி - kallakurichi MP

விழுப்புரம்: பொதுமக்கள் கோரிக்கைகள் மீது விரைந்து செயல்படுவேன் என கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பி கவுதம சிகாமணி உறுதியளித்துள்ளார்.

gowthama sigamani
author img

By

Published : Aug 21, 2019, 2:22 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் எம்பி கவுதம சிகாமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகளுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கரும்பு நிலுவைத் தொகை குறித்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், இன்னமும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை, இன்சூரன்ஸ் தொகையை பிடித்து வைத்துள்ளார்கள். தற்போது ஆலை இயங்கத் தொடங்கி இருக்கிறது. நிலுவைத் தொகை, இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. அதை எல்லாம் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களைச் சந்தித்து விவசாயிகளுக்கு வழங்க செய்வேன்’ என்றார்.

பொதுமக்கள் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும், ‘தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை சம்பந்தமாகவும், போக்குவரத்திற்காக பேருந்து வசதி கேட்டும் அதிலும் குறிப்பார இரவு நேரங்களில் பேருந்து வசதி கேட்டும் கோரிக்கைகள் வந்துள்ளது. இது சம்பந்தமாக போக்குவரத்துத் துறை அலுவலர்களையும், வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் அழைத்து பேசியுள்ளேன், விரைவில் நிவர்த்தி செய்யப்படும்’ என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் எம்பி கவுதம சிகாமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகளுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கரும்பு நிலுவைத் தொகை குறித்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், இன்னமும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை, இன்சூரன்ஸ் தொகையை பிடித்து வைத்துள்ளார்கள். தற்போது ஆலை இயங்கத் தொடங்கி இருக்கிறது. நிலுவைத் தொகை, இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. அதை எல்லாம் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களைச் சந்தித்து விவசாயிகளுக்கு வழங்க செய்வேன்’ என்றார்.

பொதுமக்கள் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும், ‘தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை சம்பந்தமாகவும், போக்குவரத்திற்காக பேருந்து வசதி கேட்டும் அதிலும் குறிப்பார இரவு நேரங்களில் பேருந்து வசதி கேட்டும் கோரிக்கைகள் வந்துள்ளது. இது சம்பந்தமாக போக்குவரத்துத் துறை அலுவலர்களையும், வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் அழைத்து பேசியுள்ளேன், விரைவில் நிவர்த்தி செய்யப்படும்’ என்றார்.

Intro:tn_vpm_03_kallakurichi_mp_byte_tn10026Body:tn_vpm_03_kallakurichi_mp_byte_tn10026Conclusion:பொதுமக்கள் கோரிக்கைகள் மீது விரைந்து செயல் படுவேன் என கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கவுதம சிகாமணி உறுதியளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்கவுதம சிகாமணி அலுவல் நிமித்தமாக இன்று கள்ளக்குறிச்சிக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகளுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கரும்பு நிலுவைத் தொகை குறித்து, சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் தளபதி ஆகியோர் சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இன்சூரன்ஸ் தொகை பிடித்து வைத்துள்ளார்கள். தற்போது ஆலை இயங்கத் தொடங்கி இருக்கிறது. நிலுவைத் தொகையை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. அதை எல்லாம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து விவசாயிகளுக்கு வழங்க ஆவன செய்வேன். சர்க்கரை ஆலையில் இ பி பவர் பிளான்ட் கலைஞர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது அது பல வருடங்களாக இன்னும் 50 சதவீதம் கூட பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதை சீர் செய்து விவசாயிகள் பயன்பெற மின்சார துறை மந்திரியை சந்தித்து பேசுவேன் என்றார். மேலும் தொகுதியில்நிலவும் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாகவும், போக்குவரத்தில் பஸ் வசதி கேட்டும் அதுவும் இரவு நேரத்தில் பஸ் வசதி கேட்டும் கோரிக்கைகள் வந்துள்ளது. இது சம்பந்தமாக போக்குவரத்து துறை அதிகாரிகளையும், வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் அழைத்து பேசி உள்ளேன் சீக்கிரம் நிவர்த்தி செய்யப்படும். எம்பி நிதியில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிறைய கோரிக்கை எழுந்ததுள்ளது. இப்போதுதான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் நிதி கிடைக்கப்பெற்றதும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் பணிகள் மேற்கொள்ளப்படும். மீதமுள்ள பணிகள் கவர்மெண்ட்டில் என்னென்ன கொண்டு வர முடியுமோ அதையெல்லாம் கொண்டு வர முயற்சிப்பேன் என்றார். இதனைத் தொடர்ந்து எம்பி தனது 45வது பிறந்தநாளை கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது விழுப்புரம் தெற்கு திமுக மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.