கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் இம்மாகுலேட் தனியார் மகளிர் கல்லூரி பேருந்து நேற்று வழக்கம் போல் கல்லூரியிலிருந்து மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் சென்றனர். அப்போது அத்தியூர் வளைவில் பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில், படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பகண்டை கூட்ரோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் பறிமுதல்!