ETV Bharat / state

12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு! போலீஸ் வலைவீச்சு

author img

By

Published : May 8, 2019, 1:38 PM IST

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் உள்ள கள்ளக்குறிச்சி - சேலம் புறவழிச்சாலையில் செல்லும் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வரும் அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கள்ளக்குறிச்சி - சேலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பேருந்துகளின் மீது கல்வீசி தாக்கிவரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப். 28ஆம் தேதியன்று அரசுப் பேருந்து உட்பட நான்கு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திரும்பவும் ஒரு அரசுப் பேருந்து உட்பட ஐந்து பேருந்துகளின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரபாகரன் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை 12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபடும் அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.

12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கள்ளக்குறிச்சி - சேலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பேருந்துகளின் மீது கல்வீசி தாக்கிவரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப். 28ஆம் தேதியன்று அரசுப் பேருந்து உட்பட நான்கு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திரும்பவும் ஒரு அரசுப் பேருந்து உட்பட ஐந்து பேருந்துகளின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரபாகரன் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை 12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபடும் அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.

12 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு
Intro:TN_VPM_1b_08_SIMOULTINOUS_BUS_GLASS_BROKEN_SCRIPT_TN10026


Body:TN_VPM_1b_08_SIMOULTINOUS_BUS_GLASS_BROKEN_SCRIPT_TN10026


Conclusion:தொடரும் பேருந்து கண்ணாடிகள் உடைப்பு ! இதுவரையில் 12 பஸ் கண்ணாடிகள் உடைப்பு !! விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கள்ளக்குறிச்சி-சேலம் புறவழிச்சாலையில் தனியார் பள்ளி அருகே தொடர்ந்து பேருந்துகளின் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது.குறிப்பாக சேலம் மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கல் வீசி தாக்கி செல்கின்றனர். இதுபோல் கடந்த பிப்ரவரி மாதம் 28 தேதியன்று அரசு பேருந்து உட்பட நான்கு பேருந்துகளை கல்வீசி கண்ணடிகள் உடைக்கப்பட்டது.இந்த நிலையில் பேருந்துகள் மீது கல்வீசி பேருந்துகளில் வருபவர்களிடத்தில் வழிப்பறி செய்வதாக கூறி இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்து இரண்டு மாதத்தில் மீண்டும் இரண்டு தினங்களுக்கு முன்பு 5 பேருந்து 4 தனியார் பேருந்து ஒரு அரசு பேருந்து கண்ணாடியை மர்ம நபர்கள் அதே இடத்தில் உடைத்தனர்.அதனை தொடர்ந்து இன்றும் அதே பகுதிகளில் மூன்று தனியார் பேருந்தும், ஒரு அரசு பேருந்தின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சென்றனர்.இது குறித்து கள்ளக்குறிச்சி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சசம்பவத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பிரபாகரன் படுகாயம் அடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.