விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். நாட்டின் பாதுகாப்பு, தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, ஜெயலலிதா அறிவித்த சிறப்பு திட்டங்களையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது என்றார்.
மேலும் சிறுபான்மையினர், கிறிஸ்துவர்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் இயக்கம் தமாகா. சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தமாகா பாடுபடும் என்று உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து, மதவாதம் என்ற பெயரை சொல்லி காங்கிரஸ் நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.