ETV Bharat / state

'புதுப்பாளையம் மணல் குவாரியை ஆட்சியர் தடுத்துநிறுத்த வேண்டும்' - பொன்முடி வலியுறுத்தல்!

author img

By

Published : Jun 19, 2020, 11:47 PM IST

விழுப்புரம்: டி.புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மணல் குவாரி செயல்படுவதை மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும் என திமுக எம்எல்ஏ பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

பொன்முடி
பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மணல் குவாரியை, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கரோனா சூழலைப் பயன்படுத்தி மணல் கொள்ளையடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பகுதி மக்களின் கருத்தைக் கேட்காமல் மணல் அள்ளக்கூடாது.

தவறினால் திமுக சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடுக்கு மணல் கொள்ளையே காரணம். எனவே இந்த மணல் குவாரியை மாவட்ட ஆட்சியர் தடுத்துநிறுத்த வேண்டும்" என்றார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மணல் குவாரியை, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கரோனா சூழலைப் பயன்படுத்தி மணல் கொள்ளையடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பகுதி மக்களின் கருத்தைக் கேட்காமல் மணல் அள்ளக்கூடாது.

தவறினால் திமுக சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடுக்கு மணல் கொள்ளையே காரணம். எனவே இந்த மணல் குவாரியை மாவட்ட ஆட்சியர் தடுத்துநிறுத்த வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.