ETV Bharat / state

மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நோயாளி!

author img

By

Published : Aug 19, 2020, 2:49 PM IST

விழுப்புரம்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

A patient committed suicide by hanging at Villupuram Government Hospital
A patient committed suicide by hanging at Villupuram Government Hospital

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன் (60). இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 12ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் இருசப்பன் கரோனா தொற்றால் பாதிக்கப்படாதது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர், இருசப்பனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன் (60). இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 12ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் இருசப்பன் கரோனா தொற்றால் பாதிக்கப்படாதது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர், இருசப்பனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.