கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில், தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவை தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதற்காக நேற்று (ஆகஸ்ட் 07) ஒரே நாளில் 110 மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களின் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 144 ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நேற்று வரை 35 ஆயிரத்து 620 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 ஆயிரத்து 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 18 ஆயிரத்து 136 இருசக்கர வாகனங்கள், 442 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 765 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கேரளா ஏர் இந்தியா விமான விபத்து - மீட்புப் பணிகள் நிறைவு