ETV Bharat / state

போக்குவரத்து காவலர்களுக்கு பதிலாக களத்தில் இறங்கிய திமுக எம்.பி - field instead of traffic police

வேலூர்: கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய திமுக எம்பி களத்தில் இறங்கியது வாகன ஓட்டிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

போக்குவரத்தை சரிசெய்த திமுக எம்பி கதிர் ஆனந்த்
author img

By

Published : Sep 28, 2019, 11:24 PM IST

வேலூர் மாவட்டத்திற்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். மேலும் இன்று அமாவாசை என்பதால் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

போக்குவரத்தை சரிசெய்த திமுக எம்பி கதிர் ஆனந்த்

இதனால் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன நெரிசல் அதிகமாக இருப்பதை பார்த்த அவர் காரிலிருந்து இறங்கி போக்குவரத்தை சரிசெய்தார்.

இதையும் படிங்க: காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது விரைவில் சரிசெய்யப்படும்' - கதிர் ஆனந்த்

வேலூர் மாவட்டத்திற்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். மேலும் இன்று அமாவாசை என்பதால் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

போக்குவரத்தை சரிசெய்த திமுக எம்பி கதிர் ஆனந்த்

இதனால் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன நெரிசல் அதிகமாக இருப்பதை பார்த்த அவர் காரிலிருந்து இறங்கி போக்குவரத்தை சரிசெய்தார்.

இதையும் படிங்க: காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது விரைவில் சரிசெய்யப்படும்' - கதிர் ஆனந்த்

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் - களத்தில் இறங்கிய திமுக பாராளமன்ற உறுப்பினர்Body:மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வேலூர் வருகை தந்தார் மேலும் இன்று மாலய அமாவாசை என்பதால் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதன காரணமாக இன்று காலை முதல் வேலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலை ஏற்பட்டது இதனிடையே இன்று மாலை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மற்றொரு கோவில் ஒன்றில் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இதனால் இரவு மீண்டும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமத்துக்கு ஆளாகினர் இந்நிலையில் அந்த சமயம் வேலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினரும் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் காரில் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார் அப்போது போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை அறிந்து காரிலிருந்து இறங்கிய கதிர் ஆனந்த் ரோட்டில் இறங்கி மக்களோடு இணைந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தார் அதன்படி எதிர்புறம் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி ஒருபுறமாக வாகனங்களுக்கு வழிவிட்டு நெரிசலை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டார் சொகுசு காரில் வந்த பாராளுமன்ற உறுப்பினர் திடீரென காரிலிருந்து இறங்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் இடையே நெகழ்ச்சி ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.