ETV Bharat / state

திருடிய வீட்டில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்!

author img

By

Published : Sep 3, 2019, 7:17 PM IST

வேலூர்: வாணியம்பாடி அருகே வீட்டை உடைத்து உள்ளிருந்த பொருட்களை திருடியது மட்டுமல்லாமல் அங்கேயே திருடர்கள் சமைத்து சாப்பிட்ட விவகாரம் நடந்துள்ளது.

திருடிய வீட்டில் மக்ரூனி சாபிட்ட திருடர்கள்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சென்னாம்பேட்டை தக்கடி தெருவைச் சேர்ந்தவர், ஃபாரூக். பெரும் தொழிலதிபரான இவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார்.

திருட்டு நடந்த வீடு.

இதனை அறிந்த திருடர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த பல லட்ச மதிப்பிலான தங்க நகைகள், வீட்டில் இருந்த டிவி, வெளியே இருந்த இருசக்கர வாகனம் என அனைத்தையும் திருடினர். மேலும், திருடிய சோர்வில் அவர்கள் சமையல் அறைக்குச் சென்று மக்ரூனி சமைத்து சாப்பிட்டு சென்றுள்ளனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சென்னாம்பேட்டை தக்கடி தெருவைச் சேர்ந்தவர், ஃபாரூக். பெரும் தொழிலதிபரான இவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார்.

திருட்டு நடந்த வீடு.

இதனை அறிந்த திருடர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த பல லட்ச மதிப்பிலான தங்க நகைகள், வீட்டில் இருந்த டிவி, வெளியே இருந்த இருசக்கர வாகனம் என அனைத்தையும் திருடினர். மேலும், திருடிய சோர்வில் அவர்கள் சமையல் அறைக்குச் சென்று மக்ரூனி சமைத்து சாப்பிட்டு சென்றுள்ளனர்.

Intro:
வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து தங்க நகைகள், டிவி மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடிய கலைப்பில் வீட்டில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்.


Body: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை தக்கடி தெருவை சேர்ந்தவர் ஃபாரூக் தொழிலதிபரான இவர் தனது குடும்பத்தாருடன் பெங்களூருவில் தனது மகன் வீட்டிற்கு இரண்டு தினங்களுக்கு முன் சென்றிருந்தார்.

இதனையறிந்த மர்மநபர்கள் நேற்று இரவு ஃபாரூக் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து மாடிக்குச்சென்று பீரோவில் இருந்த பல லட்சமதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து பின்னர் சமையலறைக்கு சென்று மக்ரூனி செய்து சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்த டிவியையும் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் திருடிச்சென்றுள்ளனர்.


Conclusion: இன்று காலை ஃபாரூக்கின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஃபாரூக்கிற்கு தொலைபேசியில் தகவல் அளித்துப்பின் வாணியம்பாடி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

கொள்ளையடித்து பின்னர் அங்கே சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்களை நினைத்து ஓர் பக்கம் சிரிப்பிலும் மறுப்பக்கம் அச்சத்திலும் அப்பகுதியில் மக்கள் இருக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.