ETV Bharat / state

‘பொன். ராதாகிருஷ்ணனுக்கு மனநிலை சரியில்லை’

author img

By

Published : Jan 24, 2020, 7:23 PM IST

வேலூர்: காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மனநிலை சரியில்லாமல் பேசுகிறார் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்தார்.

‘பொன். ராதாகிருஷ்ணன் மனநிலை சரியில்லாமல் பேசுகிறார்’
‘பொன். ராதாகிருஷ்ணன் மனநிலை சரியில்லாமல் பேசுகிறார்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குரல் கொடுக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், வேலூரில் பேசுகையில் இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மனநிலை சரியில்லாமல் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இன்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழு உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் இதில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நிருபர்களிடம் பேட்டியளிக்கும்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சிலைகளை அசிங்கப்படுத்துவது சேதப்படுத்துவது என்பது சில பைத்தியக்காரர்கள் செய்யும் வேலை ஆகும். அவர்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அவர்களை காவல்துறை பார்த்துக் கொள்ளும். அவர்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை கொடுத்தால் இது நடக்காது என்றார்.
விவசாயிகளுடனான கலந்துரையாடல் பற்றிய கேள்விக்கு, விவசாயிகளுக்கான சேவை எண் என 1551 என்ற பொது தொலைபேசி நம்பர் கொடுத்துள்ளனர். நான் நாங்குநேரியில் விவசாயிகளை சந்தித்தபோது ஒரு நம்பர் கொடுத்தார்கள். ஆனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டால் இரண்டு நாளாக எடுக்கவில்லை. தற்போது அந்த நம்பரில் எடுத்துப் பேசுகிறார்கள். இதில் விழிப்புணர்வு இல்லை என்பதுதான் குற்றச்சாட்டு. நான் 150 ஏக்கர் விவசாயம் செய்து வருகிறேன், எனக்கே தொடர்பு எண் தெரியவில்லை.

விவசாயிகள் பயன்படுகிற வகையில் தமிழக அரசு ஏரி குளங்களை தூர்வார வேண்டும். பேக்கேஜ் முறையில் பத்து குளங்களை ஒரு ஒப்பந்ததாரருக்கு கொடுக்கின்றனர். அவர் எந்த அளவுக்கு மணல் எடுக்க வேண்டும் என்பதை ஒருநாளும் கடைபிடிப்பதில்லை. ஒரு கமிட்டி அமைத்து அதை கண்காணிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

‘பொன். ராதாகிருஷ்ணன் மனநிலை சரியில்லாமல் பேசுகிறார்’

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் படித்தவர் என்று நான் நினைக்கிறேன். அரசியல் தெரிந்தவர், பலமுறை மந்திரியாக இருந்தவர். அவர் சரிவர பத்திரிகைகளை படிக்காமல் இருக்கிறார். நெல்சன் இறந்தவுடன் முதன்முதலாக நேரில் சென்றது நாங்கள்தான், ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது நாங்கள்தான். மந்திரியாக இருந்தவர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசுவது என்பது எனக்கு புரியவில்லை. சிலர் படித்தும் பண்பு இல்லாமல் இருப்பார்கள். ஒரு மந்திரியாக இருந்தவர் எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை, அறிவு சார்ந்த நிலையில் அவர் பேச வேண்டும். 6 எம்எல்ஏக்கள்தான் இதற்கு காரணம் என்று பேசினால் எப்படி ? அவர் மனநிலை சரியில்லாமல் இதுபோன்று பேசுகிறார் என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குரல் கொடுக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், வேலூரில் பேசுகையில் இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மனநிலை சரியில்லாமல் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இன்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழு உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் இதில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நிருபர்களிடம் பேட்டியளிக்கும்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சிலைகளை அசிங்கப்படுத்துவது சேதப்படுத்துவது என்பது சில பைத்தியக்காரர்கள் செய்யும் வேலை ஆகும். அவர்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அவர்களை காவல்துறை பார்த்துக் கொள்ளும். அவர்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை கொடுத்தால் இது நடக்காது என்றார்.
விவசாயிகளுடனான கலந்துரையாடல் பற்றிய கேள்விக்கு, விவசாயிகளுக்கான சேவை எண் என 1551 என்ற பொது தொலைபேசி நம்பர் கொடுத்துள்ளனர். நான் நாங்குநேரியில் விவசாயிகளை சந்தித்தபோது ஒரு நம்பர் கொடுத்தார்கள். ஆனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டால் இரண்டு நாளாக எடுக்கவில்லை. தற்போது அந்த நம்பரில் எடுத்துப் பேசுகிறார்கள். இதில் விழிப்புணர்வு இல்லை என்பதுதான் குற்றச்சாட்டு. நான் 150 ஏக்கர் விவசாயம் செய்து வருகிறேன், எனக்கே தொடர்பு எண் தெரியவில்லை.

விவசாயிகள் பயன்படுகிற வகையில் தமிழக அரசு ஏரி குளங்களை தூர்வார வேண்டும். பேக்கேஜ் முறையில் பத்து குளங்களை ஒரு ஒப்பந்ததாரருக்கு கொடுக்கின்றனர். அவர் எந்த அளவுக்கு மணல் எடுக்க வேண்டும் என்பதை ஒருநாளும் கடைபிடிப்பதில்லை. ஒரு கமிட்டி அமைத்து அதை கண்காணிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

‘பொன். ராதாகிருஷ்ணன் மனநிலை சரியில்லாமல் பேசுகிறார்’

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் படித்தவர் என்று நான் நினைக்கிறேன். அரசியல் தெரிந்தவர், பலமுறை மந்திரியாக இருந்தவர். அவர் சரிவர பத்திரிகைகளை படிக்காமல் இருக்கிறார். நெல்சன் இறந்தவுடன் முதன்முதலாக நேரில் சென்றது நாங்கள்தான், ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது நாங்கள்தான். மந்திரியாக இருந்தவர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசுவது என்பது எனக்கு புரியவில்லை. சிலர் படித்தும் பண்பு இல்லாமல் இருப்பார்கள். ஒரு மந்திரியாக இருந்தவர் எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை, அறிவு சார்ந்த நிலையில் அவர் பேச வேண்டும். 6 எம்எல்ஏக்கள்தான் இதற்கு காரணம் என்று பேசினால் எப்படி ? அவர் மனநிலை சரியில்லாமல் இதுபோன்று பேசுகிறார் என்று தெரிவித்தார்.

Intro:வேலூர் மாவட்டம்

காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மனநிலை சரியில்லாமல் பேசுகிறார் - காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் எம்பிக்கள் குரல் கொடுக்கவில்லை என்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருந்தார் இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் வேலூரில் பேசுகையில் இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மனநிலை சரியில்லாமல் பேசுவதாக தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இன்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவினர் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழு உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நிருபர்களிடம் பேட்டியளிக்கும்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் பதிலளிக்கையில் சிலைகளை அசிங்கப்படுத்துவது சேதப்படுத்துவது என்பது சில பைத்தியக்காரர்கள் செய்யும் வேலை ஆகும் அவர்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் அவர்களை காவல்துறை பார்த்துக் கொள்ளும் ஒரு பைத்தியக்காரன் குவாட்டர் போட்டுக்கொண்டு சாணத்தை தூக்கி வீசுவதும் செருப்பை தூக்கி வீசவும் செய்து விடுவார்கள் இது பழக்க வழக்கத்தில் இருக்கிறது அவர்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை கொடுத்தால் இது நடக்காது விவசாயிகளுக்கு 1551 என்ற பொது தொலைபேசி நம்பர் கொடுத்துள்ளனர் நான் நாங்குநேரியில் விவசாயிகளை சந்தித்தபோது ஒரு நம்பர் கொடுத்தார்கள் ஆனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டால் இரண்டு நாளாக எடுக்கவில்லை தற்போது அந்த நம்பரில் எடுத்துப் பேசுகிறார்கள் இதில் விழிப்புணர்வு இல்லை என்பது தான் குற்றச்சாட்டு நான் 150 ஏக்கர் விவசாயம் செய்து வருகிறேன் எனக்கே தொடர்பு எண் தெரியவில்லை என்றார் மேலும் விவசாயிகள் பயன்படுகின்ற வகையில் தமிழக அரசு ஏரி குளங்களை தூர்வார வேண்டும் பேக்கேஜ் முறையில் பத்து குளங்களை ஒரு ஒப்பந்ததாரருக்கு கொடுக்கின்றனர் அவர் எந்த அளவுக்கு மணல் எடுக்க வேண்டும் என்பதை ஒரு நாளும் கடைபிடிப்பதில்லை நான் எனது தொகுதியில் 54 குளங்களை தூர் வாரினேன் எனவே அரசாங்க பணம் இதுபோன்று குளங்கள் தூர் வருவதில் வீணாகிறது ஒரு கமிட்டி அமைத்து அதை கண்காணிக்கவேண்டும் என்று தெரிவித்தார் தொடர்ந்து கன்யாகுமரியில் காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் படித்தவர் என்று நான் நினைக்கிறேன் அரசியல் தெரிந்தவர் பலமுறை மந்திரியாக இருந்தவர் அவர் சரிவர பத்திரிகைகள் படிக்காமல் இருக்கிறார் நெல்சன் இறந்தவுடன் முதன்முதலாக நேரில் சென்றது நாங்கள் தான் ஒரு கோடி பணம் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது நாங்கள்தான் மந்திரியாக இருந்தவர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசுவது என்பது எனக்கு புரியவில்லை சிலர் படித்தும் பண்பு இல்லாமல் இருப்பார்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பார்கள் ஒரு மந்திரியாக இருந்தவர் எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை அறிவு சார்ந்த நிலையில் அவர் பேச வேண்டும். 6 எம்எல்ஏக்கள் தான் இதற்கு காரணம் என்று பேசினால் எப்படி ? அவர் மனநிலை சரியில்லாமல் இதுபோன்று பேசுகிறார் என்று தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.