ETV Bharat / state

"என்எல்சி விவகாரத்தில் மக்கள் கேட்கும் விலையை கொடுங்க" வி.பி.துரைசாமி வலியுறுத்தல்!

author img

By

Published : Mar 12, 2023, 8:43 PM IST

என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், மக்கள் கேட்கும் விலையை கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

வேலூர்: பாஜகவின் நெசவாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக துணைத்தலைவரும், மாநில நெசவாளர் பிரிவு பார்வையாளருமான வி.பி.துரைசாமி கலந்து கொண்டார்.

இதில் மாநில செயற்குழுவில், கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவுச் சங்கங்களுக்கு விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்திட உரிய நேரத்தில் உற்பத்தி ஆணை வழங்கிட வேண்டும், விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்த கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிலுவைத் தொகையினை முழுவதையும் உடனடியாக தமிழ்நாடு அரசு விடுவிக்க வேண்டும், நெசவாளர்கள் உள்ள மாவட்டங்களில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, ”ஆளுநர் மூலமாக தமிழ்நாடு அரசை மிரட்டும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. நியாயத்தைக் கேட்டதால் தங்களை மிரட்டுவதாகக் கூறுகின்றனர். தவறு செய்தவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாது என்கின்றனர். என்எல்சியை விரிவாக்கம் செய்ய நிலம் தேவைப்படுகிறது. பொது நன்மைக்காக நிலத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிலத்துக்குப் பொதுமக்கள் கூடுதல் விலையைக் கேட்பது நியாயம் தான். அந்த விலையை அவர்களுக்குக் கொடுத்தாக வேண்டும்.

மத்திய அரசு முத்ரா திட்டத்தில் நெசவாளர்களுக்கு வங்கி கடன் வழங்க மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர்களுக்கு ரூ.508 கோடி கடன் வழங்கி உள்ளது. மத்திய அரசு நெசவாளர் குடும்பங்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்து மத வளர்ச்சிக்கு பாடுபட்ட வேலூர் பகுதியைச் சேர்ந்த கிருபானந்தவாரியாருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: Same Sex Marriage: ஒரே பாலின திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

வேலூர்: பாஜகவின் நெசவாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக துணைத்தலைவரும், மாநில நெசவாளர் பிரிவு பார்வையாளருமான வி.பி.துரைசாமி கலந்து கொண்டார்.

இதில் மாநில செயற்குழுவில், கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவுச் சங்கங்களுக்கு விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்திட உரிய நேரத்தில் உற்பத்தி ஆணை வழங்கிட வேண்டும், விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்த கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிலுவைத் தொகையினை முழுவதையும் உடனடியாக தமிழ்நாடு அரசு விடுவிக்க வேண்டும், நெசவாளர்கள் உள்ள மாவட்டங்களில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, ”ஆளுநர் மூலமாக தமிழ்நாடு அரசை மிரட்டும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. நியாயத்தைக் கேட்டதால் தங்களை மிரட்டுவதாகக் கூறுகின்றனர். தவறு செய்தவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாது என்கின்றனர். என்எல்சியை விரிவாக்கம் செய்ய நிலம் தேவைப்படுகிறது. பொது நன்மைக்காக நிலத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிலத்துக்குப் பொதுமக்கள் கூடுதல் விலையைக் கேட்பது நியாயம் தான். அந்த விலையை அவர்களுக்குக் கொடுத்தாக வேண்டும்.

மத்திய அரசு முத்ரா திட்டத்தில் நெசவாளர்களுக்கு வங்கி கடன் வழங்க மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர்களுக்கு ரூ.508 கோடி கடன் வழங்கி உள்ளது. மத்திய அரசு நெசவாளர் குடும்பங்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்து மத வளர்ச்சிக்கு பாடுபட்ட வேலூர் பகுதியைச் சேர்ந்த கிருபானந்தவாரியாருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: Same Sex Marriage: ஒரே பாலின திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.