திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையின மக்களுக்காக மாநில, மத்திய அரசுகளால் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆட்சியர் சிவனருள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின் மதத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதிகளுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தங்களுடைய கருத்துகளை கலந்து ஆலோசித்தப் பிறகு எவ்வளவு நிதி ஒதுக்கவேண்டும் என்பது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
இதையும் படிங்க: தொடர் வாகன கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது