வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி இன்று மாதனூரில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டனர்.