வேலூர்: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்.6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் ஒன்றியத்தில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கே.வி. குப்பம் பேருந்து நிலையத்தில் இன்று(அக்.4) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "கே. வி. குப்பம் தொகுதியில் முறையான வளர்ச்சி இல்லை. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை. இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால், இந்த தொகுதியில் ஒரு கல்லூரி, நூறு படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை அமைத்து தரப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் பரப்புரை ஓய்ந்தது!