ETV Bharat / state

காவல் நிலையத்தில் விசாரணை - கைதி மரணம்!

வேலூர்: காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சத்துவாச்சாரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

author img

By

Published : Oct 26, 2019, 11:32 PM IST

சுரேஷ்

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர் கலில் ஆகிய இருவரையும் சத்துவாச்சாரி காவல் நிலைய காவலர் ஒரு வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது காவல்நிலைய வாசலில் திடீரென சுரேஷ் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். காவல்துறையினர் அவரை மீட்டு வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் துரை பாண்டியன் ஆகியோர் காவல் நிலைய ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்

இந்த சம்பவம் பற்றி காவல்துறை அலுவலர் கூறுகையில், சுந்தர்ராஜன் என்பவர் தனது டிரைவிங் ஸ்கூலில் சுரேஷ் மற்றும் கலில் ஆகிய இருவரும் பணம் கேட்டு மிரட்டி ரூ1.50 லட்சம் வாங்கியதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் இருவரையும் விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையம் அழைத்து வந்தோம். அவர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து சுரேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுரேஷ் நேற்று இரவு மது அருந்திவிட்டு, உணவு சாப்பிட்டுள்ளார் அந்த உணவு ஒத்துழைக்காமல் சுரேஷ் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பாக 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். சுரேஷ் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு! - உறவினர்கள் போராட்டம்

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர் கலில் ஆகிய இருவரையும் சத்துவாச்சாரி காவல் நிலைய காவலர் ஒரு வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது காவல்நிலைய வாசலில் திடீரென சுரேஷ் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். காவல்துறையினர் அவரை மீட்டு வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் துரை பாண்டியன் ஆகியோர் காவல் நிலைய ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்

இந்த சம்பவம் பற்றி காவல்துறை அலுவலர் கூறுகையில், சுந்தர்ராஜன் என்பவர் தனது டிரைவிங் ஸ்கூலில் சுரேஷ் மற்றும் கலில் ஆகிய இருவரும் பணம் கேட்டு மிரட்டி ரூ1.50 லட்சம் வாங்கியதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் இருவரையும் விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையம் அழைத்து வந்தோம். அவர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து சுரேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுரேஷ் நேற்று இரவு மது அருந்திவிட்டு, உணவு சாப்பிட்டுள்ளார் அந்த உணவு ஒத்துழைக்காமல் சுரேஷ் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பாக 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். சுரேஷ் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு! - உறவினர்கள் போராட்டம்

Intro:வேலூர் மாவட்டம்

வேலூரில் விசாரணைக் கைதி மர்மமான முறையில் மரணம் - போலீஸ் உயரதிகாரிகள் நேரில் விசாரணை Body:வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் சுரேஷ்(46). இவரது நண்பர் கலில். இந்த நிலையில் சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக இன்று சுரேஷ் மற்றும் கலீல் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் காவல்நிலைய வாசல் வைத்து திடீரென சுரேஷ் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். அவரை வேலூரில் உள்ள பிரபல தனியார்(சிஎம்சி) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து நிலையில் அங்கு சுரேஷ் உயிரிழந்தார் விசாரணை கைதி மர்மமான முறையில். தகவலறிந்து வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ( பொறுப்பு )துரை பாண்டியன் ஆகியோர் சத்துவாச்சாரி காலத்திற்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் அழகுராணியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது; சுரேஷ் மற்றும் கலீல் ஆகிய இருவரும் சேர்ந்து சத்துவாச்சாரியில் உள்ள சுந்தர்ராஜன் என்பவரது டிரைவிங் ஸ்கூலில் சென்று பணம் கேட்டு மிரட்டியதாகவும் ரூ1.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும் கூறி சுந்தரராஜன் சசத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் சத்துவாச்சாரி போலீஸார் சுரேஷ் மற்றும் கலீலிடம் விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர் காவல் நிலைய வாசலில் வைத்து சுரேஷ் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம் பின்னர் மேல் சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனை கொண்டு சென்றபோது அங்கு அவர் உயிரிழந்தார் உடனே சுரேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுரேஷ் நேற்று இரவு தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு திரைப்படம் பார்த்துள்ளார் பின்னர் அதிகாலை உணவு சாப்பிட்டுள்ளார் அந்த உணவு ஒத்துழைக்காமல் சுரேஷ் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது இது தொடர்பாக 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். சுரேஷ் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவித்தனர். இருப்பினும் சுரேஷ் மரணத்துக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் வைத்து உயிரிழந்தச் சம்பவம் வேலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.