ETV Bharat / state

எளிமையாக நடந்து முடிந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா - சோகமடைந்த பக்தர்கள்

author img

By

Published : May 14, 2020, 1:31 PM IST

வேலூர்: மிகவும் பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா, ஊரடங்கு உத்தரவால் 10 பேருடன் எளிமையாக நடந்து முடிந்தது.

gengaiyamman festival
gengaiyamman festival

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் புகழ்பெற்ற கெங்கையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி 1ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உட்பட வெளி மாநிலங்களிலிருந்தும், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த சிரசு திருவிழா, தற்போது, கரோனா பாதிப்பின் காரணமாக ஆகம விதிப்படி, எளிமையாக சிரசு திருவிழாவை நடத்திக்கொள்ள வேலூர் ஆட்சியர் அனுமதியளித்திருந்தார். அதனடிப்படையில், வைகாசி 1ஆம் தேதியான இன்று நள்ளிரவில், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் 10 பேருடன் 2 மணி நேரத்தில் சிரசு திருவிழா நடைபெற்றது.

கெங்கையம்மன் கோயில் திருவிழா

பல லட்சம் மக்கள் கலந்துகொள்ளும் கெங்கையம்மன் திருவிழாவினை, வீட்டிலிருந்து உள்ளூர் மக்கள் கண்டுகளித்தனர். ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறும் இந்த விழா, கலையிழந்து காணப்பட்டதால் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், கோயில் அம்மனைக் காண ஊர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, காவல் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய 7 பேர்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் புகழ்பெற்ற கெங்கையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி 1ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உட்பட வெளி மாநிலங்களிலிருந்தும், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த சிரசு திருவிழா, தற்போது, கரோனா பாதிப்பின் காரணமாக ஆகம விதிப்படி, எளிமையாக சிரசு திருவிழாவை நடத்திக்கொள்ள வேலூர் ஆட்சியர் அனுமதியளித்திருந்தார். அதனடிப்படையில், வைகாசி 1ஆம் தேதியான இன்று நள்ளிரவில், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் 10 பேருடன் 2 மணி நேரத்தில் சிரசு திருவிழா நடைபெற்றது.

கெங்கையம்மன் கோயில் திருவிழா

பல லட்சம் மக்கள் கலந்துகொள்ளும் கெங்கையம்மன் திருவிழாவினை, வீட்டிலிருந்து உள்ளூர் மக்கள் கண்டுகளித்தனர். ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறும் இந்த விழா, கலையிழந்து காணப்பட்டதால் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், கோயில் அம்மனைக் காண ஊர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, காவல் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய 7 பேர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.