வேலூரில் இன்று (ஜூன்.02) ஒரே நாளில் 304 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று (ஜூன்.01) 326 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது மூன்றாயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இதே போல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 90க்கும் மேல் உள்ளவர்கள் மட்டும், காட்பாடியில் உள்ள விஐடியிலும், தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை முகாமிலும் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள்:
கரோனா தொற்று பாதிப்பு குறைந்தாலும், இறப்பு விகிதம் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் 14 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இன்று 29 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 780ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையின் பலனாக, இன்று 138 பேர் குணமடைந்தன் மூலமாக, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இரண்டாயிரத்து 999 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.