ETV Bharat / state

குழந்தையை கடத்த முயன்ற இளைஞருக்கு தர்மஅடி!

author img

By

Published : Sep 10, 2019, 2:59 PM IST

வேலூர்: சோளிங்கபுரம் ரயில் நிலையத்தில் குழந்தையைக் கடத்த முயன்ற இளைஞரை உறவினர்கள் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினர்.

kidnap

வேலூா் மாவட்டம் சோளிங்கபுரம் ரயில் நிலையம் பகுதியில் தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கி ரயில் தண்டவாளத்தில் ஜல்லிகற்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வழக்கம்போல் நேற்றிரவு பணிமுடிந்து ரயில் நிலைய வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி துா்காபிரசாத் (22) என்பவரின் மனைவி பார்வதி அருகில் படுத்திருந்த ஐந்து மாதக் குழந்தையை யாருக்கும் தெரியாமல் தூக்கியுள்ளார். அப்போது குழந்தை கத்தியதால், பெற்றோர் எழுந்து என்வென்று பார்பதற்குள் அந்த நபர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

தப்பியோடிய அந்த நபர் முள் புதருக்குள் மறைந்திருப்பதைக் கண்ட தொழிலாளர்கள் அவரை துரத்திப் பிடித்து சோளிங்கபுரம் ரயில் நிலையத்தில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினர்.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர், குழந்தையை கடத்த முயன்ற நபரை கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை கடத்த முயன்ற இளைஞர் பெயர் தினேஷ் (29) என்றும் வாலாஜாபேட்டை அருகே உள்ள அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவருபவர் என்றும் தெரியவந்தது.

வேலூா் மாவட்டம் சோளிங்கபுரம் ரயில் நிலையம் பகுதியில் தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கி ரயில் தண்டவாளத்தில் ஜல்லிகற்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வழக்கம்போல் நேற்றிரவு பணிமுடிந்து ரயில் நிலைய வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி துா்காபிரசாத் (22) என்பவரின் மனைவி பார்வதி அருகில் படுத்திருந்த ஐந்து மாதக் குழந்தையை யாருக்கும் தெரியாமல் தூக்கியுள்ளார். அப்போது குழந்தை கத்தியதால், பெற்றோர் எழுந்து என்வென்று பார்பதற்குள் அந்த நபர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

தப்பியோடிய அந்த நபர் முள் புதருக்குள் மறைந்திருப்பதைக் கண்ட தொழிலாளர்கள் அவரை துரத்திப் பிடித்து சோளிங்கபுரம் ரயில் நிலையத்தில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினர்.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர், குழந்தையை கடத்த முயன்ற நபரை கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை கடத்த முயன்ற இளைஞர் பெயர் தினேஷ் (29) என்றும் வாலாஜாபேட்டை அருகே உள்ள அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவருபவர் என்றும் தெரியவந்தது.

Intro:சோளிங்கர் ரயில் நிலையத்தில் பரபரப்பு குழந்தையை கடத்த முயன்ற வாலிபருக்கு பொது மக்கள் தர்ம அடி

ரயில்வே காவல்துறை விசாரணைBody:வேலூா் மாவட்டம் சோளிங்கர் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்த முயன்றதாக 29 வயதான இலங்கை அகதியை சோ்ந்த வாலிபரை குழந்தையின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் துரத்தி பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து ரயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தனா்.
இது குறித்து காட்பாடி ரயில்வே காவல் துறையினர் விசாரனை.
விடியற்காலை நடந்த இச்சம்வத்தால் சோளிங்கா் ரயில் நிலைய பகுதியில் பயனிகளிடையே பெரும்பரபரப்பு நிலவியது

வேலூா் மாவட்டம் சோளிங்கா் ரயில் நிலையம் பகுதியில் தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சொ்லகொளராம் கிராமத்தை சோ்ந்த 20 க்கும் மேற்ப்பட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கி ரயில் தண்டவாளத்தில் ஜல்லிகற்களை நிரம்பும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனா். நேற்று பணிமுடித்து இரவு வழக்கம்போல் ரயில் நிலைய வளாகத்தில் தூங்கி கொண்டிருந்துள்ளனா் அப்பொழுது அங்குவந்த மா்ம வாலிபா் அதிகாலை 3.30 மணியளவல் தூங்கிகொண்டிருந்த தொழிலாளி துா்காபிரசாத்(22) என்பவரின் மனைவி பார்வதி அருகில் படுத்திருந்த 5 மாத குழந்தை ரிஷிகவந்தாவை யாருக்கும் தெரியாமல் தூக்கி உள்ளார் இதில் அலறியடித்து குழந்தை கத்தியுள்ளதால் பெற்றோர்கள் எழுந்து என்வென்று பார்பதற்க்குள் அந்த மா்மநபா் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது இதனால் அதிா்ச்சியடைந்த ஆந்திரமாநில தொழிலாளா்களின் உறவினா்கள் அவரை துரத்தி சென்றுள்ளனா் அப்பொழுது அந்த மா்மநபா் அங்கிருந்த முட்புதரில் மறைந்து தலைமறை வாகியுள்ளார் இதைகண்ட தொழிலாளா்கள் அவரை பிடித்து தா்மஅடி கொடுத்து இழுத்துவந்து சோளிங்கா் ரயில் நிலையத்தில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்து நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனா்.
இச்சம்வம் தொடா்பாக நிலைய அதிகாரி குமார் காட்பாடி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் தகவல் அறிந்து உடனடியாக வந்த ரயில்வே காவல் துறையினா் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரனை மேற்கொண்டனா் இதில் குழந்தையை கடத்த முயன்றதாக பிடிப்பட்ட வாலிபர் வேலூா் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள அனைகட்டு இலங்கை அகதிகள் முகாமை சோ்ந்த தினேஷ் (29) என்பதும் அவா் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது மேலும் அவரை கைது செய்து காட்பாடி ரயில்வே காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை நடத்தி வருகின்றனா். சோளிங்கா் ரயில் நிலையத்தில் நடந்த இச்சம்பவத்தால் ரயிலுக்காக காத்திருந்த யனிகளிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.