வேலூர்: தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுக்க அடிக்கடி சோதனை நடைபெறும்.
அதன்படி ஜெயிலர் குணசேகரன் தலைமையிலான காவலர்கள் ஜெயில் வளாகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள 4-வது கண்காணிப்பு கோபுரத்தின் கீழே மண் தோண்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனால் சந்தேகமடைந்த காவலர்கள் நேற்று முன்தினம் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர். அப்போது குழியில் அங்கு இருந்த ஒரு செல்போன் மற்றும் பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஜெயிலர் குணசேகரன் பாகாயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் ரவுடியை கொலை செய்யத்திட்டமிட்ட 4 பேர் கைது; பட்டாக்கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்