ETV Bharat / state

சிறையில் தொலைபேசி பறிமுதல்: முருகனுக்கு சிறப்பு சலுகைகள் ரத்து

author img

By

Published : Oct 22, 2019, 6:18 PM IST

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுவரும் முருகனுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.

murugan

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், 28 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் சிறப்புப் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அக்டோபர் 18ஆம் தேதி முருகனின் அறையில் இருந்து தொலைபேசி ஒரு சிம்கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து முருகன் உயர்பாதுகாப்பு பிரிவு மூன்றில் இருந்து ஒன்றிற்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து வேலூர் மத்தியச் சிறைத் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், விதிகளை மீறி தொலைபேசி வைத்திருந்ததாக பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முருகனுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறைச் சலுகைகள் மூன்று மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முருகன் அவரது மனைவி நளினியை 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் சந்தித்து பேசுவது, கடிதப் போக்குவரத்து, அவரது உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் சந்திப்பு உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், ஏற்கனவே முருகன் இருந்த உயர் பாதுகாப்பு மூன்றாவது பிரிவில் நேற்று மாலை சிறை அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் மேலும் 2 சிம்கார்டுகள், 1 ஹெட்செட் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், 28 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் சிறப்புப் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அக்டோபர் 18ஆம் தேதி முருகனின் அறையில் இருந்து தொலைபேசி ஒரு சிம்கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து முருகன் உயர்பாதுகாப்பு பிரிவு மூன்றில் இருந்து ஒன்றிற்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து வேலூர் மத்தியச் சிறைத் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், விதிகளை மீறி தொலைபேசி வைத்திருந்ததாக பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முருகனுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறைச் சலுகைகள் மூன்று மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முருகன் அவரது மனைவி நளினியை 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் சந்தித்து பேசுவது, கடிதப் போக்குவரத்து, அவரது உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் சந்திப்பு உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், ஏற்கனவே முருகன் இருந்த உயர் பாதுகாப்பு மூன்றாவது பிரிவில் நேற்று மாலை சிறை அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் மேலும் 2 சிம்கார்டுகள், 1 ஹெட்செட் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Intro:வேலூர் மாவட்டம்

செல்போன் பறிமுதல் விவகாரம்

முருகனுக்கு சிறை சலுகைகள் ரத்து - மேலும் 2 சிம்கார்டுகள், 1 ஹெட்செட் பறிமுதல்Body:முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனின் அறையில் இருந்து கடந்த (18.10.2019) வெள்ளிக்கிழமை 1 செல்போன், 1 சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து முருகன் உயர்பாதுகாப்பு பிரிவு 3-ல் இருந்து ஒன்றிற்க்கு மாற்றப்பட்டார். வேலூர் மத்திய சிறை துறையினர் அளித்த புகாரையடுத்து சிறை விதிகளை மீறி பொருள் வைத்திருந்ததாக பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது ஒரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முருகனுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறைசலுகைகள் 3 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் நளினி -முருகன் சந்திப்பு, கடித போக்குவரத்து, உறவினர்கனர்கள் பார்வையாளர்கள் சந்திப்பு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்க்கனவே முருகன் இருந்த உயர்பாதுகாப்பு 3-வது பிரிவில் நேற்று மாலை சிறை அதிகாரிகள் மேற்க்கொண்ட சோதனையில் மேலும் 2 சிம்கார்டுகள், 1 ஹெட்செட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.