ETV Bharat / state

ஆற்காடு காவல்நிலையத்தில் ஹெச். ராஜா மீது புகார் - ஆற்காடு காவல் நிலையம்

வேலூர்: இஸ்லாமிய பகுதி குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா
author img

By

Published : May 17, 2019, 11:21 PM IST

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர். இந்து மதம் மற்றும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை, பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் கடும் சொற்களை பதிவு செய்வது வழக்கம். இப்படி அவர் பேசி வருவதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் வேலூர் மாவட்டம், மேல்விஷாரம் பகுதி குறித்து சர்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் வேலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் சல்மான் ஆற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர். இந்து மதம் மற்றும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை, பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் கடும் சொற்களை பதிவு செய்வது வழக்கம். இப்படி அவர் பேசி வருவதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் வேலூர் மாவட்டம், மேல்விஷாரம் பகுதி குறித்து சர்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் வேலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் சல்மான் ஆற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா மீது வேலூர் மாவட்டம் ஆற்காடு காவல் நிலையத்தில் புகார்

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர் அதாவது பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக ஹெச்.ராஜா கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார் குறிப்பாக பொது நிகழ்ச்சி மற்றும் பொது இடங்களில் கடும் சொற்களால் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார் இப்படி பரபரப்பு பேச்சுக்கு பெயர் போன ஹெச்.ராஜா மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஹெச்.ராஜா மீது இன்று புகார் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதாவது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த ராஜா, இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் பகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறி மேல்விசாரம் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி மாணவரணி செயலாளர் சல்மான் ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதில் எங்கள் பகுதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த எச்ச ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.