ETV Bharat / state

அனுமதியின்றி இயங்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல்!

author img

By

Published : Mar 1, 2020, 3:40 PM IST

திருச்சி: அனுமதியின்றி இயங்கிவரும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்கும் பணியை பொதுப்பணித் துறையினர் தொடங்கியுள்ளனர்.

ஆலைகளுக்கு சீல் வைக்கும் அலுவலர்கள்
ஆலைகளுக்கு சீல் வைக்கும் அலுவலர்கள்

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 23 குடிநீர் சுத்திகரிப்பு ஆலாய்களில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு அலுவலர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் அமைந்துள்ள பெஸ்ட் அக்வா என்கிற ஆலையில் உள்ள ஆழ்குழாயை பொதுப்பணித் துறை நிலத்தடி நீரியல் பிரிவு உதவி இயக்குனர் பாலகுமரன் தலைமையிலான அலுவலர்கள் சீல் வைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர், மன்னச்சநல்லூர், முசிறி, லால்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அனுமதி பெறாத குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆலைகளுக்கு சீல் வைக்கும் அலுவலர்கள்

மேலும், திருச்சி மாவட்டம் முழுவதும் நான்கு குழுக்களாக பிரிந்து சீல் வைக்கும் நடவடிகையில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: நகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்குச் சீல்!

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 23 குடிநீர் சுத்திகரிப்பு ஆலாய்களில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு அலுவலர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் அமைந்துள்ள பெஸ்ட் அக்வா என்கிற ஆலையில் உள்ள ஆழ்குழாயை பொதுப்பணித் துறை நிலத்தடி நீரியல் பிரிவு உதவி இயக்குனர் பாலகுமரன் தலைமையிலான அலுவலர்கள் சீல் வைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர், மன்னச்சநல்லூர், முசிறி, லால்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அனுமதி பெறாத குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆலைகளுக்கு சீல் வைக்கும் அலுவலர்கள்

மேலும், திருச்சி மாவட்டம் முழுவதும் நான்கு குழுக்களாக பிரிந்து சீல் வைக்கும் நடவடிகையில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: நகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்குச் சீல்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.