ETV Bharat / state

திருச்சியில் வார்டு வாரியாக கரோனா பரிசோதனை முகாம்!

author img

By

Published : Jul 16, 2020, 10:29 AM IST

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் இன்று முதல் வார்டு வாரியாக கரோனா பரிசோதனை முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Ward Wise Corona Testing Camp in Trichy Corporation
Ward Wise Corona Testing Camp in Trichy Corporation

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால், தமிழ்நாட்டில் இதுவரை 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வார்டு வாரியாக பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதியில்‌ உள்ள 65 வார்டுகளிலும்‌ கரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்புப் பணி முன்னெச்சரிக்கையாக பள்ளிகளில் பரிசோதனை முகாம்‌ நடைபெறுகிறது.

இந்த பரிசோதனை முகாமை மாநகராட்சி அலுவலர்கள்‌, சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் இணைந்து இன்று (ஜூலை 16) முதல்‌ தொடங்கவுள்ளனர். திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள நான்கு மண்டலங்களிலும் வார்டு வாரியாக இந்த முகாம் நடைபெறுகிறது.

கரோனா வைரஸ்‌ நோய்‌ மருத்துவ பரிசோதனை முகாம்‌ ஸ்ரீரங்கம் கோட்டத்தில் ஸ்ருதி மஹால், எஸ்.ஆர்.சி சாலை- சிந்தாமணி, வார்டு 8 என்ற முகவரியில் நடைபெறுகிறது. அதேபோல் அரியமங்கலம், கோட்டம் வார்டு 23 - பாலக்கரை செங்குளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெறுகிறது. கோ - அபிசேகபுரம் கோட்டத்தில் உறையூர் 60ஆவது வார்டு கல்நாயக்கன் தெருவில் உள்ள ஆர்.சி. நடுநிலை பள்ளியில் நடைபெறுகிறது.

பொன்மலை கோட்டத்தில் 38ஆவது வார்டு கவிபாரதி நகரிலுள்ள அய்மான் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த நான்கு வார்டுகளிலும் இன்று காலை 9 மணிக்கு இந்த பரிசோதனை முகாம் தொடங்கியுள்ளது. மதியம் 1 மணி வரை முகாம் நடக்கும். இதேபோல் நாளையும் தொடர்ந்து ஒவ்வொரு வார்டு வாரியாக பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 1.5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால், தமிழ்நாட்டில் இதுவரை 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வார்டு வாரியாக பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதியில்‌ உள்ள 65 வார்டுகளிலும்‌ கரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்புப் பணி முன்னெச்சரிக்கையாக பள்ளிகளில் பரிசோதனை முகாம்‌ நடைபெறுகிறது.

இந்த பரிசோதனை முகாமை மாநகராட்சி அலுவலர்கள்‌, சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் இணைந்து இன்று (ஜூலை 16) முதல்‌ தொடங்கவுள்ளனர். திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள நான்கு மண்டலங்களிலும் வார்டு வாரியாக இந்த முகாம் நடைபெறுகிறது.

கரோனா வைரஸ்‌ நோய்‌ மருத்துவ பரிசோதனை முகாம்‌ ஸ்ரீரங்கம் கோட்டத்தில் ஸ்ருதி மஹால், எஸ்.ஆர்.சி சாலை- சிந்தாமணி, வார்டு 8 என்ற முகவரியில் நடைபெறுகிறது. அதேபோல் அரியமங்கலம், கோட்டம் வார்டு 23 - பாலக்கரை செங்குளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெறுகிறது. கோ - அபிசேகபுரம் கோட்டத்தில் உறையூர் 60ஆவது வார்டு கல்நாயக்கன் தெருவில் உள்ள ஆர்.சி. நடுநிலை பள்ளியில் நடைபெறுகிறது.

பொன்மலை கோட்டத்தில் 38ஆவது வார்டு கவிபாரதி நகரிலுள்ள அய்மான் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த நான்கு வார்டுகளிலும் இன்று காலை 9 மணிக்கு இந்த பரிசோதனை முகாம் தொடங்கியுள்ளது. மதியம் 1 மணி வரை முகாம் நடக்கும். இதேபோல் நாளையும் தொடர்ந்து ஒவ்வொரு வார்டு வாரியாக பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 1.5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.