ETV Bharat / state

மின்னல் தாக்கி கர்ப்பிணி, சகோதரர் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 5, 2019, 1:58 PM IST

திருச்சி: துறையூர் அருகே அம்மம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிசு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் லட்சுமணன் - ராஜாமணி தம்பதிக்கு முத்துலட்சுமி (21), குணா (17) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முத்துலட்சுமி திருமணம் முடிந்து 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். குணா பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேருவதற்காக காத்திருக்கிறார். பெரம்பலூரில் வசிக்கும் முத்துலட்சுமி, சில நாட்களுக்கு முன்பு தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று மாலை தம்பி குணாவுடன் முத்துலட்சுமி மாடு மேய்க்க சென்றபோது மாலை நான்கு மணி அளவில் மழை பெய்ததால், அருகிலிருந்த தகர கொட்டகையில் இருவரும் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், திடீரென பலத்த இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மின்னல் தாக்கி கர்ப்பிணி, சகோதரர் உயிரிழப்பு!

மின்னல் தாக்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் இருந்த நில உரிமையாளர் இருவரைக் கண்டு கிராமத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் கிராம மக்கள் சார்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முத்துலட்சுமியின் வயிற்றில் இருந்த 8 மாத சிசுவையும் அப்புறப்படுத்தினர். பின்னர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டபோது கதறி அழுத காட்சி அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் லட்சுமணன் - ராஜாமணி தம்பதிக்கு முத்துலட்சுமி (21), குணா (17) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முத்துலட்சுமி திருமணம் முடிந்து 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். குணா பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேருவதற்காக காத்திருக்கிறார். பெரம்பலூரில் வசிக்கும் முத்துலட்சுமி, சில நாட்களுக்கு முன்பு தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று மாலை தம்பி குணாவுடன் முத்துலட்சுமி மாடு மேய்க்க சென்றபோது மாலை நான்கு மணி அளவில் மழை பெய்ததால், அருகிலிருந்த தகர கொட்டகையில் இருவரும் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், திடீரென பலத்த இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மின்னல் தாக்கி கர்ப்பிணி, சகோதரர் உயிரிழப்பு!

மின்னல் தாக்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் இருந்த நில உரிமையாளர் இருவரைக் கண்டு கிராமத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் கிராம மக்கள் சார்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முத்துலட்சுமியின் வயிற்றில் இருந்த 8 மாத சிசுவையும் அப்புறப்படுத்தினர். பின்னர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டபோது கதறி அழுத காட்சி அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இடி மின்னலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் பலியானதால் பெற்றோர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.


Body:திருச்சி:
இடி மின்னலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது அம்மம்பாளையம் கிராம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயி. இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு முத்துலட்சுமி (வயது 21), குணா (வயது 17) ஆகிய இரு பிள்ளைகள் இருந்தனர். இதில் குணா பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்காக காத்திருந்தார். முத்துலட்சுமிக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பெரம்பலூரில் திருமணம் செய்து கொடுத்தனர்.அவரது கணவர் பிரகாஷ் பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முத்துலட்சுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதனால் பெரம்பலூரில் இருந்து தந்தை வீடான அம்மம்பாளையத்திற்கு சில தினங்களுக்கு முன் வந்தார். இதையடுத்து தம்பி குணாவுடன் சேர்ந்து நேற்று மாலை சுமார் 4 மணிக்கு அருகில் உள்ள வயல்வெளியில் மாடு மேய்க்கச் சென்றார். மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென மழை பெய்ய தொடங்கியுள்ளது. மழையில் நனையாமல் இருப்பதற்காக கர்ப்பிணியான முத்துலட்சுமியை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த தகர கொட்டகையில் குணா தஞ்சமடைந்தார்.
அப்போது திடீரென பலத்த இடியுடன் கூடிய மின்னல் இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது சற்று தொலைவில் நின்றிருந்த நிலத்தின் உரிமையாளர் செல்வராஜ் என்பவர் அங்கு வந்துள்ளார். இருவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து அவர் எழுப்பியுள்ளார். அப்போது இருவரும் அசைவு இல்லாமல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊர் மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர். இருவரும் இடி மின்னல் தாக்கி இறந்த தகவல் கேட்டு கதறி அழுதனர். தகவலறிந்த துறையூர் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு கால தாமதமாகி விட்டதால் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை பிரேத பரிசோதனை சுமார் 11 மணியளவில் தொடங்கியது. பிரேத பரிசோதனையின் போது முத்துலட்சுமி வயிற்றில் இருந்து 8 மாத ஆண் குழந்தையை இறந்த நிலையில் மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர். அம்மம்பாளையம் கிராம மக்களும், இறந்தவர்களின் உறவினர்கள், குடும்பத்தினரும் மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவில் கூடினர். அவர்கள் இறந்தவர்களை நினைத்து கதறி அழுத காட்சி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது. அதோடு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் இழந்த பெற்றோர் லட்சுமணனும், அவரது மனைவி ராஜாமணியும் கதறி அழுத காட்சி பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.
உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் துறையூர் மருத்துவமனையிலிருந்து உடல்கள் அம்மம்பாளையம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றது. இறுதி சடங்கில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

பேட்டி-1 சின்னசாமி

பேட்டி-2 சம்பவத்தை முதலில் பார்த்த நில உரிமையாளர் செல்வராஜ்.


Conclusion:பிரேத பரிசோதனை நடந்தபோது கிராம மக்களும், இறந்தவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர்கள் மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவில் கூடி கதறி அழுதனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.