ETV Bharat / state

அதிமுக சார்பில் கபசுரக் குடிநீர்

author img

By

Published : Apr 6, 2020, 1:57 PM IST

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் அதிமுக சார்பில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

trichy-kabasura-water-distribution
trichy-kabasura-water-distribution

கரோனா வைரஸ் தாக்குதல் உலகையே உலுக்கி வருகிறது. இதனால் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

அடிக்கடி கை கழுவ வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும், தனித்து இருக்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளளன. கரோனா வைரஸ் தொற்றை தடுக்க கபசுரக் குடிநீர் பருக வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்தா பிரிவில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதிமுக சார்பில் கபசுர குடிநீர்
அதிமுக சார்பில் கபசுர குடிநீர்

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக தினசரி சந்தை செயல்பட்டு வரும் பகுதியில், சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிமுக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக நிர்வாகி கோபி தலைமையில் அக்கட்சியினர் வழங்கினர்.

இதையும் படிங்க: யூரியா தட்டுப்பாடு - பருத்திப் பயிர் பாதிப்பு!

கரோனா வைரஸ் தாக்குதல் உலகையே உலுக்கி வருகிறது. இதனால் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

அடிக்கடி கை கழுவ வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும், தனித்து இருக்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளளன. கரோனா வைரஸ் தொற்றை தடுக்க கபசுரக் குடிநீர் பருக வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்தா பிரிவில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதிமுக சார்பில் கபசுர குடிநீர்
அதிமுக சார்பில் கபசுர குடிநீர்

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக தினசரி சந்தை செயல்பட்டு வரும் பகுதியில், சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிமுக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக நிர்வாகி கோபி தலைமையில் அக்கட்சியினர் வழங்கினர்.

இதையும் படிங்க: யூரியா தட்டுப்பாடு - பருத்திப் பயிர் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.