ETV Bharat / state

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுர புனரமைப்பு பணிகள் தீவிரம்.. அமைச்சர்கள் நேரில் ஆய்வு..

author img

By

Published : Aug 8, 2023, 1:16 PM IST

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுர புனரமைப்பு பணிகள் தீவிரம்
ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுர புனரமைப்பு பணிகள் தீவிரம்
ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுர புனரமைப்பு பணிகள் தீவிரம்

திருச்சி: தமிழ்நாட்டின் சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2 வது நிலை சுவர்கள், சில தினங்களாகவே விசிசல் ஏற்பட்டு இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத அந்த கோபுரத்தின் முதல் நிலை சுவர் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அதிகாலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பொருட்சேதம், உயிர்சேதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

அதனையடுத்து அந்த கோபுரத்தை புனரமைப்பு செய்வதற்காக 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கோபுரத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று (ஆகஸ்ட் 8) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் ஆணையரிடம் கேட்டறிந்தனர். மேலும் புனரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள கிழக்கு வாசல் கோபுரத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி அதிகாலை சுவர் இடிந்து விழுந்தது.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் அவர்களின் உத்தரவின்படி உடனடியாக சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், கிழக்கு கோபுரம் ஒரு பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, NIT பேராசிரியர்கள் கொண்ட குழுவால் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

அதன் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைத்து விடும். மேலும் இந்த கோயில் கோபுரத்தில் முழுவதுமாக மராமத்துப்பணிகள் செய்வதற்காக திட்டமிட்டு உள்ளோம். அந்த பணிகளுக்காக ரூ. 2 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கோயில் சீரமைப்பு பணிகள், கோயில் நிதியை கொண்டோ அல்லது தனியார் பங்களிப்புடனோ நடைபெறும்.

அதிகபட்சம் ஓராண்டுக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். கிழக்கு கோபுரம் மட்டுமின்றி ஸ்ரீரங்கத்தில் உள்ள, 21 கோபுரங்களிலும் NIT நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்யச் சொல்லி இருக்கிறோம். அதனடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் மற்ற கோபுரங்களிலும் சீரமைப்புப் பணிகள் செய்யப்படும்.

ஒரு பணிகள் தொடங்குவதற்கு முன்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பின்பு அதன் திட்ட அறிக்கையை சரி பார்க்க வேண்டும். அதற்கு பிறகு தான் நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள 21 கோபுரங்களையும் முழுமையாக பராமரிப்பு பணிகள் செய்து முடிக்க ஓராண்டு காலம் ஆகும்.
மேலும் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் பராமரிப்பு பணிகள் செய்யவும், கோவில் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: உலக தாய்ப்பால் வாரம்: நடனமாடி உற்சாகப்படுத்திய செவிலியர்கள்!

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுர புனரமைப்பு பணிகள் தீவிரம்

திருச்சி: தமிழ்நாட்டின் சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2 வது நிலை சுவர்கள், சில தினங்களாகவே விசிசல் ஏற்பட்டு இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத அந்த கோபுரத்தின் முதல் நிலை சுவர் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அதிகாலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பொருட்சேதம், உயிர்சேதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

அதனையடுத்து அந்த கோபுரத்தை புனரமைப்பு செய்வதற்காக 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கோபுரத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று (ஆகஸ்ட் 8) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் ஆணையரிடம் கேட்டறிந்தனர். மேலும் புனரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள கிழக்கு வாசல் கோபுரத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி அதிகாலை சுவர் இடிந்து விழுந்தது.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் அவர்களின் உத்தரவின்படி உடனடியாக சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், கிழக்கு கோபுரம் ஒரு பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, NIT பேராசிரியர்கள் கொண்ட குழுவால் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

அதன் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைத்து விடும். மேலும் இந்த கோயில் கோபுரத்தில் முழுவதுமாக மராமத்துப்பணிகள் செய்வதற்காக திட்டமிட்டு உள்ளோம். அந்த பணிகளுக்காக ரூ. 2 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கோயில் சீரமைப்பு பணிகள், கோயில் நிதியை கொண்டோ அல்லது தனியார் பங்களிப்புடனோ நடைபெறும்.

அதிகபட்சம் ஓராண்டுக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். கிழக்கு கோபுரம் மட்டுமின்றி ஸ்ரீரங்கத்தில் உள்ள, 21 கோபுரங்களிலும் NIT நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்யச் சொல்லி இருக்கிறோம். அதனடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் மற்ற கோபுரங்களிலும் சீரமைப்புப் பணிகள் செய்யப்படும்.

ஒரு பணிகள் தொடங்குவதற்கு முன்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பின்பு அதன் திட்ட அறிக்கையை சரி பார்க்க வேண்டும். அதற்கு பிறகு தான் நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள 21 கோபுரங்களையும் முழுமையாக பராமரிப்பு பணிகள் செய்து முடிக்க ஓராண்டு காலம் ஆகும்.
மேலும் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் பராமரிப்பு பணிகள் செய்யவும், கோவில் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: உலக தாய்ப்பால் வாரம்: நடனமாடி உற்சாகப்படுத்திய செவிலியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.