ETV Bharat / state

தலை இல்லாமல் நடுரோட்டில் கிடந்த ரவுடி... கையில் தலையுடன் ஆஜரான மூன்று பேர்

author img

By

Published : Apr 28, 2020, 12:47 PM IST

Updated : Apr 28, 2020, 1:38 PM IST

திருச்சி: இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரவுடியின் தலையை வெட்டி அந்த தலையுடன் மூன்று பேர் நேராக காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முண்டமாக நடுரோட்டில் கிடந்த ரவுடி
முண்டமாக நடுரோட்டில் கிடந்த ரவுடி

திருச்சி ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவைச் சேர்ந்த தலைவெட்டி சந்துரு என்கிற ரவுடி சந்திரமோகன் மீது கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் ரவுடி சந்திரமோகன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

முண்டமாக நடுரோட்டில் கிடந்த ரவுடி

அதேசமயம் காரில் வந்த மூன்று பேர் அவரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் சந்திரமோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சந்திரமோகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

பின்னர் அந்த கும்பல் சந்திரமோகன் தலையை துண்டித்து கையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு காவல் நிலையத்தின் வாசலில் தலையை வைத்துவிட்டு மூன்று பேரும் சரண் அடைந்தனர். இதையடுத்து காவல் துறையினர் தலையை கைப்பற்றி மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது ரவுடி சந்திரமோகனால் கொலை செய்யப்பட்டவரின் மகன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து இந்த படுகொலையை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் ரவுடி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண்ணின் விரல்களை வெட்டியவர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவைச் சேர்ந்த தலைவெட்டி சந்துரு என்கிற ரவுடி சந்திரமோகன் மீது கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் ரவுடி சந்திரமோகன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

முண்டமாக நடுரோட்டில் கிடந்த ரவுடி

அதேசமயம் காரில் வந்த மூன்று பேர் அவரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் சந்திரமோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சந்திரமோகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

பின்னர் அந்த கும்பல் சந்திரமோகன் தலையை துண்டித்து கையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு காவல் நிலையத்தின் வாசலில் தலையை வைத்துவிட்டு மூன்று பேரும் சரண் அடைந்தனர். இதையடுத்து காவல் துறையினர் தலையை கைப்பற்றி மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது ரவுடி சந்திரமோகனால் கொலை செய்யப்பட்டவரின் மகன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து இந்த படுகொலையை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் ரவுடி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண்ணின் விரல்களை வெட்டியவர் கைது

Last Updated : Apr 28, 2020, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.