ETV Bharat / state

‘என்னை காணவில்லை என புகாரளித்தவர்கள் பைத்தியக்காரர்கள்’ - திருநாவுக்கரசர் - trichy news

திருச்சி: தன்னை காணவில்லை என்று புகாரளித்தவர்கள் பைத்தியக்காரர்கள் என்று திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கொதிப்படைந்துள்ளார்.

திருநாவுக்கரசர்
author img

By

Published : Aug 20, 2019, 6:17 AM IST

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்ற பின்னர் திருச்சியில் அலுவலகம் அமைக்கப்படும், மக்கள் குறைகள் கேட்கப்படும், திருச்சியில் அரைகுறையாக நிற்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

வெற்றி பெற்ற பிறகு அவர் திருச்சியில் அலுவலகமும் அமைக்கவில்லை. அதோடு தொகுதிக்கும் சரிவர வருவதில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருநாவுக்கரசருக்கு தேர்தல் பணியாற்றிய மஜ்லிஸ் கட்சியினர் திருச்சி அரியமங்கலம் காவல்நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு அளித்தனர்.

அதில், திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசரை காணவில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்த புகார் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இன்று பாதியில் நிற்கும் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தை திருநாவுக்கரசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் அவ்வப்போது தொகுதிக்கு வருகை தந்து மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறேன். சிலருக்கு நிதி உதவியும் அளித்துள்ளேன். நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒன்றரை மாதம் நடந்தது. அதோடு எனது வீட்டில் இரண்டு துக்க நிகழ்வுகள் நடந்துவிட்டது.

திருநாவுக்கரசர் பேட்டி

நான் 40 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். இது இந்த தொகுதி மக்களுக்கும் தெரியும். அதனால் தான் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். இந்தச் சூழ்நிலையில் என்னை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவையும் போலீசார் ஏற்கவில்லை.

என் மீது புகார் அளித்தவர்கள் பைத்தியக்காரர்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள். அடையாளம் தெரியாதவர்கள். யாருடைய தூண்டுதல் பேரில் புகார் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. என் மீது புகார் அளித்தவர்கள் மீது வழக்கு தொடரப்படும்’ என்று கூறியுள்ளார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்ற பின்னர் திருச்சியில் அலுவலகம் அமைக்கப்படும், மக்கள் குறைகள் கேட்கப்படும், திருச்சியில் அரைகுறையாக நிற்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

வெற்றி பெற்ற பிறகு அவர் திருச்சியில் அலுவலகமும் அமைக்கவில்லை. அதோடு தொகுதிக்கும் சரிவர வருவதில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருநாவுக்கரசருக்கு தேர்தல் பணியாற்றிய மஜ்லிஸ் கட்சியினர் திருச்சி அரியமங்கலம் காவல்நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு அளித்தனர்.

அதில், திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசரை காணவில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்த புகார் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இன்று பாதியில் நிற்கும் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தை திருநாவுக்கரசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் அவ்வப்போது தொகுதிக்கு வருகை தந்து மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறேன். சிலருக்கு நிதி உதவியும் அளித்துள்ளேன். நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒன்றரை மாதம் நடந்தது. அதோடு எனது வீட்டில் இரண்டு துக்க நிகழ்வுகள் நடந்துவிட்டது.

திருநாவுக்கரசர் பேட்டி

நான் 40 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். இது இந்த தொகுதி மக்களுக்கும் தெரியும். அதனால் தான் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். இந்தச் சூழ்நிலையில் என்னை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவையும் போலீசார் ஏற்கவில்லை.

என் மீது புகார் அளித்தவர்கள் பைத்தியக்காரர்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள். அடையாளம் தெரியாதவர்கள். யாருடைய தூண்டுதல் பேரில் புகார் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. என் மீது புகார் அளித்தவர்கள் மீது வழக்கு தொடரப்படும்’ என்று கூறியுள்ளார்.

Intro:என்னை காணவில்லை என்று புகார் அளித்தவர்கள் பைத்தியக்காரர்கள் என்று திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கூறினார்.


Body:திருச்சி: என்னை காணவில்லை என்று புகார் அளித்தவர்கள் பைத்தியக்காரர்கள் என்று திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கொதிப்படைந்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்ற பின்னர் திருச்சியில் அலுவலகம் அமைக்கப்படும். மக்கள் குறைகள் கேட்கப்படும். திருச்சியில் அரைகுறையாக நிற்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் வெற்றி பெற்ற பிறகு அவர் திருச்சியில் அலுவலகமும் அமைக்கவில்லை. அதோடு தொகுதிக்கும் சரிவர வருவதில்லை என்றும் புகார் எழுந்தது.
இந்நிலையில். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருநாவுக்கரசருக்கு தேர்தல் பணியாற்றிய மஜ்லிஸ் கட்சியினர் திருச்சி அரியமங்கலம் காவல்நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில் திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசரை காணவில்லை என்று புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகார் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து இன்று பாதியில் நிற்கும் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தை திருநாவுக்கரசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த ரயில்வே மேம்பாலத்திற்கு ராணுவ நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலத்திற்கு பதிலாக ராணுவத்திற்கு மாற்று இடம் வழங்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதற்கென நிலம் ஒதுக்குவதாக மாநில அரசு தெரிவித்தது. ஆனால் இதற்கு ராணுவம் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான நடைமுறை சிக்கல் உள்ளதால் மேம்பால பணி பாதியில் நிற்கிறது. இதுதொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அதோடு நாடாளுமன்றத்திலும் பேசியுள்ளேன். விரைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நான் அவ்வப்போது தொகுதிக்கு வருகை தந்து மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறேன். சிலருக்கு நிதி உதவியும் அளித்து உள்ளேன். நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒன்றரை மாதம் நடந்தது அதோடு எனது வீட்டில் இரண்டு துக்க நிகழ்வுகள் நடந்து விட்டது. நான் 40 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். இது இந்த தொகுதி மக்களுக்கும் தெரியும். அதனால் தான் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். இந்தச் சூழ்நிலையில் என்னை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவையும் போலீசார் ஏற்கவில்லை. ஆனால் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. என் மீது புகார் அளித்தவர்கள் பைத்தியகாரர்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள். அடையாளம் தெரியாதவர்கள். யாருடைய தூண்டுதல் பேரில் புகார் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. என் மீது புகார் அளித்தவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றார்.

அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு தேர்தல் முடிந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அலுவலகத்திற்கு இடம் பார்க்கும் வேலையை தான் மேற்கொண்டு வருகிறீர்கள். இதுபோன்ற ஒரு புகார் அளித்த காரணத்தால் தான் தற்போது ரயில்வே மேம்பாலத்தை பார்வை இடுகிறீர்களா? என்று கேட்டனர்.
இதனால் கொதிப்படைந்த திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு புறப்பட முற்பட்டார்.

இது தொடர்பான கேள்விகளை தவிர்த்து பிற கேள்விகளை கேட்பதாக நிருபர்கள் கூறியதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பை தொடர்ந்தார். அப்போது அவர் கூறுகையில் பொது விஷயத்தில் கருத்துக் கூற ப.சிதம்பரத்திற்கும் முத்தரசனுக்கு உரிமை உள்ளது. அதேபோல் வைகோவுக்கு எதிராக இளங்கோவன் சில கருத்துக்களை தெரிவித்தார். அதுவும் அவர்களது தனிப்பட்ட உரிமை உள்ளது.
இதனால் திமுக கூட்டணி பிரியும். திமுகவில் இருந்து காங்கிரஸ் பிரிந்துவிடும் என்று கூறுவது சரியல்ல . திமுக தலைவர் ஸ்டாலின் சரியாக உள்ளார். அவர் கூட்டணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். திமுக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை. தெளிவாக உள்ளது.
மோடி, அமித்ஷா குறித்து ரஜினி கூறியது முடிந்து போன விஷயம். யார் அர்ஜுனர் ஆக இருந்தால் என்ன? யார் கிருஷ்ணராக இருந்தால் என்ன?. ரஜினிக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றார் .


Conclusion:திமுக கூட்டணி தெளிவாக உள்ளது. எவ்வித குழப்பமும் இல்லை என்று திருநாவுக்கரசர் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.