ETV Bharat / state

ஆசிரியைகள் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

திருச்சி: ஆசிரியைகள் திட்டியதால் பள்ளியின் 2ஆவது மாடியிலிருந்து குதித்து மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

school_girl_suicide_attemp
author img

By

Published : Oct 12, 2019, 3:10 PM IST

திருச்சி மேலப்புதூர் பகுதியில் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் காலாண்டு தேர்வு முடிவடைந்து இதற்கான மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. இதற்காக மாணவிகள் தங்களது பெற்றோருடன் நேரில் வருமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.

இன்று காலை முதல் மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளிக்கு வந்து மதிப்பெண் பட்டியலை பெற்றுச்சென்றனர். அப்பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையுடன் மதிப்பெண் பட்டியல் வாங்க வந்துள்ளார். அப்போது தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஆசிரியைகள் மாணவியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி பள்ளியின் இரண்டாவது மாடிக்கு ஓடிச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் படுகாயம் அடைந்த மாணவி உயிருக்கு போராடிபோது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

School girl suicide attempt

மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் தற்கொலை முயற்சி குறித்து பாலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல் தற்கொலையில் உதிர்ந்த சோகம் !

திருச்சி மேலப்புதூர் பகுதியில் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் காலாண்டு தேர்வு முடிவடைந்து இதற்கான மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. இதற்காக மாணவிகள் தங்களது பெற்றோருடன் நேரில் வருமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.

இன்று காலை முதல் மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளிக்கு வந்து மதிப்பெண் பட்டியலை பெற்றுச்சென்றனர். அப்பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையுடன் மதிப்பெண் பட்டியல் வாங்க வந்துள்ளார். அப்போது தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஆசிரியைகள் மாணவியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி பள்ளியின் இரண்டாவது மாடிக்கு ஓடிச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் படுகாயம் அடைந்த மாணவி உயிருக்கு போராடிபோது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

School girl suicide attempt

மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் தற்கொலை முயற்சி குறித்து பாலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல் தற்கொலையில் உதிர்ந்த சோகம் !

Intro:திருச்சியில் மதிப்பெண் குறைந்ததால் பள்ளி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.


Body:திருச்சி:
திருச்சியில் மதிப்பெண் குறைந்ததால் பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மேலப்புதூர் பகுதியில் பிரபல செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் காலாண்டு தேர்வு முடிவடைந்துவிட்டது. இதற்கான மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவிகள் தங்களது பெற்றோருடன் நேரில் வருமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் பெற்றோர் தங்களது மகள்களுடன் பள்ளிக்கு வந்து மதிப்பெண்களை பெற்று சென்றனர்.
இந்தவகையில் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவி ஏஞ்சலினா லெமோ என்பவர் தனது தந்தையுடன் மதிப்பெண் பட்டியல் வாங்க வந்தார். அப்போது தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஆசிரியைகள் ஏஞ்சலினா லெனோவா திட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பள்ளியின் இரண்டாவது மாடிக்கு ஓடி சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
இதில் படுகாயம் அடைந்த மாணவி உயிருக்கு போராடினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதிப்பெண் குறைந்ததால் மாணவி பள்ளியிலேயே மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Conclusion:மாணவிக்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.