ETV Bharat / state

லாரி மீது புல்லட் மோதி தந்தை, மகன் உயிரிழப்பு!

திருச்சி: நின்று கொண்டிருந்த லாரி மீது புல்லட் மோதியதில் வழக்கறிஞரும், அவரது மூத்த மகனும் உயிரிழந்தனர்.

author img

By

Published : Nov 24, 2019, 3:13 PM IST

road_accident_script_

திருச்சி மாவட்டம் துவாக்குடி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜராஜசோழன். இவர் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

road accident
வழக்கறிஞர் ராஜராஜசோழன்

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிலம்ப பயிற்சிக்காக மகன் சேரலாதனை(12) அழைத்துக் கொண்டு, தனது புல்லட்டில் ராஜராஜசோழன் சென்றார். பின்னர் பயிற்சி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திருவரம்பூர் தாலுகா அலுவலகம் அருகே சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. புல்லட் ஓட்டி வந்த ராஜராஜசோழன் இதை கவனிக்காமல் புல்லட்டை ஓட்டியுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக, லாரியின் பின்புறம் புல்லட் பயங்கரமாக மோதியது.

road accident
மகன் சேரலாதன்

இதில் ராஜராஜசோழனும், அவரது மகனும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர். அங்கு நள்ளிரவு இருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். தகவலறிந்த துவாக்குடி காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:

’திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தான் அதிசயம் நடக்கும்’ - திருநாவுக்கரசர்

திருச்சி மாவட்டம் துவாக்குடி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜராஜசோழன். இவர் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

road accident
வழக்கறிஞர் ராஜராஜசோழன்

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிலம்ப பயிற்சிக்காக மகன் சேரலாதனை(12) அழைத்துக் கொண்டு, தனது புல்லட்டில் ராஜராஜசோழன் சென்றார். பின்னர் பயிற்சி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திருவரம்பூர் தாலுகா அலுவலகம் அருகே சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. புல்லட் ஓட்டி வந்த ராஜராஜசோழன் இதை கவனிக்காமல் புல்லட்டை ஓட்டியுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக, லாரியின் பின்புறம் புல்லட் பயங்கரமாக மோதியது.

road accident
மகன் சேரலாதன்

இதில் ராஜராஜசோழனும், அவரது மகனும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர். அங்கு நள்ளிரவு இருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். தகவலறிந்த துவாக்குடி காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:

’திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தான் அதிசயம் நடக்கும்’ - திருநாவுக்கரசர்

Intro:திருச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது புல்லட் மோதியதில் வழக்கறிஞரும், அவரது மூத்த மகனும் உயிரிழந்தனர்.Body:

திருச்சி:
திருச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது புல்லட் மோதியதில் வழக்கறிஞரும், அவரது மூத்த மகனும் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜராஜசோழன். வழக்கறிஞர். இவர் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர் ஆவார். இவரது மனைவி மேனகா. இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
மூத்த மகன் சேரலாதன் (12). இவன் பெல் ஆர்.எஸ்.கே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். இளைய மகன் சத்ரபதி. இவன் பெல் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிலம்ப பயிற்சிக்காக மகன் சேரலாதனை அழைத்துக் கொண்டு தனது புல்லட்டில் ராஜராஜசோழன் சென்றார்.
பின்னர் பயிற்சி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திருவரம்பூர் தாலுகா அலுவலகம் அருகே சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. புல்லட் ஓட்டி வந்த ராஜராஜசோழன் இதை கவனிக்காமல் புல்லட்டை ஓட்டியுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் புல்லட் பயங்கரமாக மோதியது
இதில் ராஜராஜசோழனும், அவரது மகனும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர். அங்கு நள்ளிரவு ராஜராஜ சோழன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சேரலாதனும் உயிரிழந்தார். தகவலறிந்த துவாக்குடி போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை விபத்தில் தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் திருச்சியில் பிரபல வழக்கறிஞர் என்பதால் நீதித்துறையிலும் இவரது மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ராஜராஜ சோழனின் தாயார் அமுதா உயிரிழந்தார். அமுதாவுக்கு ராஜ ராஜ சோழனுடன் சேர்த்து ஐந்து மகன்கள்.
இறந்த தாயார் அமுதாவுக்கு துவாக்குடி வள்ளுவர் தெருவில் ராஜராஜசோழன் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.