ETV Bharat / state

பலூன் வியாபாரியின் இரண்டு பெண் பிள்ளைகள் மாயம்

திருச்சி : மயாமான தனது மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி மாநகர ஆணையரிடம் பலூன் வியாபாரி ஒருவர் மனு அளித்துள்ளார்.

author img

By

Published : May 27, 2019, 7:18 PM IST

பலூன் வியாபாரி ஒருவர் மனு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், கைலாஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். பலூன் வியாபாரியான இவருக்கு தமிழ்செல்வி(12), ஜான்சி(13) என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். சிறுமிகள் இருவரும் கடந்த 23ஆம் தேதி இரவு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமாகியுள்ளனர். மகள்கள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளார். ஆனாலும் சிறுமிகள் இருவரும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனது பிள்ளைகளை கண்டுபிடித்து கொடுக்க கோரி காந்திமார்கெட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பலூன் வியாபாரியின் 2 பெண் பிள்ளைகள் மாயம்

புகார் அளித்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த ரமேஷ் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து தனது மகள்களை கண்டுபிடித்து கொடுக்க கோரி புகார் மனு அளித்தார். புகார் மனுவை ஏற்ற ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இரண்டு சிறுமிகள் மாயமான சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், கைலாஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். பலூன் வியாபாரியான இவருக்கு தமிழ்செல்வி(12), ஜான்சி(13) என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். சிறுமிகள் இருவரும் கடந்த 23ஆம் தேதி இரவு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமாகியுள்ளனர். மகள்கள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளார். ஆனாலும் சிறுமிகள் இருவரும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனது பிள்ளைகளை கண்டுபிடித்து கொடுக்க கோரி காந்திமார்கெட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பலூன் வியாபாரியின் 2 பெண் பிள்ளைகள் மாயம்

புகார் அளித்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த ரமேஷ் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து தனது மகள்களை கண்டுபிடித்து கொடுக்க கோரி புகார் மனு அளித்தார். புகார் மனுவை ஏற்ற ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இரண்டு சிறுமிகள் மாயமான சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருச்சியில் பலூன் வியாபாரியின் இரண்டு பெண் குழந்தைகள் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.


Body:குறிப்பு: இதற்கான வீடியோ மெயில் மற்றும் எப்டிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

திருச்சி: பலூன் வியாபாரியும் இரண்டு பெண் குழந்தைகள் திடீரென மாயமானதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், கைலாஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லூர்துமேரி. இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள். இவர் திருச்சி மெயின்கார்டுகேட் தெப்பகுளம் பகுதியில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி இவரது இரண்டு பெண் குழந்தைகள் ஜான்சி (வயது 13), தமிழ்ச்செல்வி (வயது 12) ஆகியோர் பலூன் விற்பனை செய்து வந்தனர். அப்போது இரவு 8 மணி அளவில் 2 குழந்தைகளும் திடீரென காணாமல் போயுள்ளனர். அக்கம் பக்கம் தேடியபோதும் எங்கும் கிடைக்கவில்லை. உறவினர் வீடுகளிலும் தேடியும் கிடைக்காததால் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தனர்.
ஆனால் போலீசார் இவரது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். தொடர்ந்து நான்கு நாட்கள் ஆகியும் குழந்தைகள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து மாயமான குழந்தைகளை மீட்டு தரக்கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் மயில்வாகனன் ஆகியோரை குமரேசன், லூர்து மேரி ஆகியோர் வழக்கறிஞர் சாருமதியுடன் வந்து புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Conclusion:4 நாட்களாகியும் குழந்தைகள் கிடைக்காததால் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.