ETV Bharat / state

மணப்பாறை எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் கருப்புக்கொடி

author img

By

Published : Mar 23, 2021, 1:16 PM IST

”பத்து வருடங்களாக குறைகளைக் கேட்டு ஊருக்கு வராத எம்எல்ஏ, ஓட்டு கேட்டு வருவதா” எனக் கண்டனம் தெரிவித்து, மணப்பாறை எம்எல்ஏ ஆர். சந்திரசேகருக்கு கருப்புக் கொடி காட்டி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

people-shows-their-angry-toward-trichy-manapparai-mla
திருச்சி மணப்பாறை எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் கருப்புக்கொடி

திருச்சி: மருங்காபுரி தெற்கு ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள 65 இடங்களில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான ஆர். சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், இதுகுறித்து முன்கூட்டியே தகவலறிந்த யாகபுரம் கிராம மக்கள், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சந்திரசேகர் செல்லும் சாலையில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், ”பத்து ஆண்டுகளாக பதவியில் இருந்தபோது குறைகளைக் கேட்க எங்கள் பகுதிக்கு இவர் வந்ததே இல்லை. குடிநீர் வசதிக்காக ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தரை நீர்த்தொட்டி, ஐந்து மினி சின்டெக்ஸ் டேங்குகள் இருந்தும் குடிநீர் எங்களுக்கு கிடைப்பதில்லை" என வேதனைத் தெரிவித்தனர்.

திருச்சி மணப்பாறை எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் கருப்புக்கொடி

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சென்றால், தாங்கள் குடிக்கும் குடிநீரால்தான் எங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் அவர்கள் வேதனைத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த அதிமுக நிர்வாகிகள், கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடையாத நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அந்த ஊர்ப்பகுதிக்குள் செல்லாமல் மாற்று வழியில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: அதிமுக சாதனையைத் தரவில்லை, வேதனையைத்தான் தந்துள்ளது : ஸ்டாலின் அதிரடி

திருச்சி: மருங்காபுரி தெற்கு ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள 65 இடங்களில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான ஆர். சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், இதுகுறித்து முன்கூட்டியே தகவலறிந்த யாகபுரம் கிராம மக்கள், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சந்திரசேகர் செல்லும் சாலையில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், ”பத்து ஆண்டுகளாக பதவியில் இருந்தபோது குறைகளைக் கேட்க எங்கள் பகுதிக்கு இவர் வந்ததே இல்லை. குடிநீர் வசதிக்காக ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தரை நீர்த்தொட்டி, ஐந்து மினி சின்டெக்ஸ் டேங்குகள் இருந்தும் குடிநீர் எங்களுக்கு கிடைப்பதில்லை" என வேதனைத் தெரிவித்தனர்.

திருச்சி மணப்பாறை எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் கருப்புக்கொடி

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சென்றால், தாங்கள் குடிக்கும் குடிநீரால்தான் எங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் அவர்கள் வேதனைத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த அதிமுக நிர்வாகிகள், கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடையாத நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அந்த ஊர்ப்பகுதிக்குள் செல்லாமல் மாற்று வழியில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: அதிமுக சாதனையைத் தரவில்லை, வேதனையைத்தான் தந்துள்ளது : ஸ்டாலின் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.