ETV Bharat / state

நூறு நாள் வேலை இல்லை: பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி: நூறு நாள் வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Aug 2, 2019, 2:12 PM IST

protest

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியைச் சேர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு நூறுநாள் வேலை தரக்கோரி ஊராட்சி செயலரிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த புத்தாநத்தம் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், தங்கள் பகுதிக்கு கடந்த ஆறு மாதங்களாக நூறு நாள் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதே போல் நான்கு மாதங்களாக குடிநீரும் வரவில்லை. துப்புரவு வேலை எதுவும் முறையாக செய்யவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை காவல் துறையிடம் தெரிவித்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

இது பற்றி ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதால் தான் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். காவல் துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியைச் சேர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு நூறுநாள் வேலை தரக்கோரி ஊராட்சி செயலரிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த புத்தாநத்தம் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், தங்கள் பகுதிக்கு கடந்த ஆறு மாதங்களாக நூறு நாள் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதே போல் நான்கு மாதங்களாக குடிநீரும் வரவில்லை. துப்புரவு வேலை எதுவும் முறையாக செய்யவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை காவல் துறையிடம் தெரிவித்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

இது பற்றி ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதால் தான் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். காவல் துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர்.

Intro:100 நாள் வேலை வழங்கக்கோரி வேதனையோடு பொதுமக்கள் சாலை மறியல்.


Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை தரக் கோரி பலமுறை ஊராட்சி செயலரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சுமார் 50க்கும் மேற்பட்டோர் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த புத்தாநத்தம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.ஆனால் அவர்கள் தங்கள் பகுதிக்கு கடந்த 6 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை என்றும்,4 மாதங்களாக தண்ணீர் பிரச்சனை உள்ளதாகவும்,கடந்த இரண்டு வருடங்களாக துப்புரவு வேலை எதுவும் செய்யப்படாமல் இருப்பதால் மழை காலங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலரிடம் எடுத்துக் கூறியும் அவர் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும்,ஊராட்சி செயலர் நடவடிக்கை எடுக்க மறுத்து வந்ததன் காரணமாகவே இன்று திடீர் மறியலில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் புத்தாநத்தம்காவல் உதவி ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.