ETV Bharat / state

கார் மோதி தொழிலாளி பலி!

திருச்சி: மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அய்யாசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது நான்கு வயது பேத்தி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author img

By

Published : May 25, 2019, 10:46 PM IST

தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்கும் பணியைச் செய்து வந்தவர் அய்யாசாமி. இன்று காலை தனது நான்கு வயது பேத்தி வைஷ்ணவியை அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் பணிசெய்யும் மகள், மருமகன் ஆகியோரிடம் காண்பிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, இவர்களின் இருசக்கர வாகனம் மீது பின்பக்கமாக மோதியது. இதில், அய்யாசாமியும் சிறுமியும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த அய்யாசாமி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பேத்தி வைஷ்ணவி தலையில் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த துவரங்குறிச்சி காவல் துறையினர் சிறுமியை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்த அய்யாசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்தவர் சென்னை கோடாம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்கும் பணியைச் செய்து வந்தவர் அய்யாசாமி. இன்று காலை தனது நான்கு வயது பேத்தி வைஷ்ணவியை அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் பணிசெய்யும் மகள், மருமகன் ஆகியோரிடம் காண்பிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, இவர்களின் இருசக்கர வாகனம் மீது பின்பக்கமாக மோதியது. இதில், அய்யாசாமியும் சிறுமியும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த அய்யாசாமி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பேத்தி வைஷ்ணவி தலையில் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த துவரங்குறிச்சி காவல் துறையினர் சிறுமியை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்த அய்யாசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்தவர் சென்னை கோடாம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலி.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்கும் தொழிலாளியாக பணி செய்து வந்தவர் அய்யாசாமி. இன்று காலை தனது 4 வயது பேத்தி வைஷ்ணவியுடன் தனது இருச்சக்கர வாகனத்தில், அருகில் பெட்ரோல் பங்கில் வேலைபார்த்து வரும் மகள் ஜெயந்தி மற்றும் மருமகன் சிவக்குமார் ஆகியோருக்கு அவர்களது மகளை காண்பிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேனிவயல் பகுதியில் இருச்சக்கர வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று முன்னால் சென்ற இருச்சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற அய்யாசாமி மற்றும் சிறுமி வைஷ்ணவி இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த அய்யாசாமி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருச்சக்கர வாகனத்தில் சென்ற 4 வயது பேத்தி வைஷ்ணவி தலையில் பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார் காயமடைந்த சிறுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் உயிரிழந்த அய்யாசாமி உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் காரில் வந்தவர் சென்னை கோடாம்பாக்கத்தை சேர்ந்த லெட்சுமிநாராயணன் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த துவரங்குறிச்சி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.