ETV Bharat / state

மினி லாரி கவிழ்ந்து 6 மாடுகள் பலி - காவல் துறை விசாரணை!

author img

By

Published : Sep 25, 2019, 6:14 PM IST

திருச்சி: மணப்பாறை அருகே சென்னையிலிருந்து பசுமாடுகளை ஏற்றிக்கொண்டு தேனி சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் ஆறு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

six cow dead

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மாணிக்கம் பிள்ளை சத்திரம் என்ற இடத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்துக்குள்ளான மினி லாரி

இதில், சென்னையில் இருந்து எருமை மற்றும் பசு மாடுகளை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஆறு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மாணிக்கம் பிள்ளை சத்திரம் என்ற இடத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்துக்குள்ளான மினி லாரி

இதில், சென்னையில் இருந்து எருமை மற்றும் பசு மாடுகளை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஆறு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Intro:மினி லாரி கவிழ்ந்து 6 மாடுகள் பலி - போலீசார் தீவிர விசாரணை.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மாணிக்கம் பிள்ளை சத்திரம் என்ற இடத்தில் அதிகாலை மினி லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை நடத்தியதில் சென்னையில் இருந்து எருமை மற்றும் பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு தேனி நோக்கி செல்லும் போது இன்று அதிகாலை திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த மாணிக்கம் பிள்ளைச் சத்திரம் எனுமிடத்தில் மினி லாரி சென்ற போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.மேலும் விபத்து எவ்வாறு நடந்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.