ETV Bharat / state

திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை: கமல்ஹாசன்

author img

By

Published : Jan 11, 2020, 8:03 AM IST

திருச்சி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பின்னடைவு இல்லை என்று கூறிய கமல்ஹாசன், திராவிட அரசியல் சரியான திசையில் பயணிக்கவில்லை எனவும் கூறினார்.

Kamal gives idea for Rajini to impress people minds
Kamal gives idea for Rajini to impress people minds

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களை நோக்கி தலைமை செல்வதற்கான சூழல் தொடங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாதது எங்கள் கட்சிக்கு பின்னடைவு இல்லை.

திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

மக்கள் வாக்களிக்க எங்கள் கட்சி பணம் அளிக்காது, நேர்மையாக இருப்பது எல்லா காலத்திலும் சாத்தியம்தான். விரும்புவர்கள் பின்பற்றலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.

கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் தர்பார் படத்தில் சசிகலா பற்றிய விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது பராசக்தி காலத்திலிருந்தே தொடர்கிறது என்பதால், அதைப் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.

ரஜினி தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று கூறி உள்ளீர்களே, அதற்கு என்ன அர்த்தம் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ”உங்களிடம் சொல்லுவதைதான் அவரிடம் சொன்னேன். அவரை எங்களது கட்சியில் சேர சொல்லவில்லை. முயற்சியில் சேருங்கள் என்கிறேன்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், பணத்தை முதலீடு செய்வது என்று பொருள் அல்ல; நேர்மையையும் முதலீடு செய்யலாம். அதைத் தான் அவ்வாறு கூறினேன். அதற்கான முயற்சியில்தான் மக்கள் நீதி மய்யம் இறங்கியுள்ளது” என்றார்.

திமுக கூட்டணியில் சேருவது குறித்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த கமல், “2021ல் திராவிட கட்சிகளை தவிர்த்து பிற கட்சிகள் எங்களுடன் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மக்கள் மனதில் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. அதற்குத் தகுதியானவரை மக்கள் தேர்வுசெய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிற்கு உதவ வேண்டிய கடமை ரஜினிக்கு உண்டு'

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களை நோக்கி தலைமை செல்வதற்கான சூழல் தொடங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாதது எங்கள் கட்சிக்கு பின்னடைவு இல்லை.

திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

மக்கள் வாக்களிக்க எங்கள் கட்சி பணம் அளிக்காது, நேர்மையாக இருப்பது எல்லா காலத்திலும் சாத்தியம்தான். விரும்புவர்கள் பின்பற்றலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.

கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் தர்பார் படத்தில் சசிகலா பற்றிய விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது பராசக்தி காலத்திலிருந்தே தொடர்கிறது என்பதால், அதைப் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.

ரஜினி தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று கூறி உள்ளீர்களே, அதற்கு என்ன அர்த்தம் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ”உங்களிடம் சொல்லுவதைதான் அவரிடம் சொன்னேன். அவரை எங்களது கட்சியில் சேர சொல்லவில்லை. முயற்சியில் சேருங்கள் என்கிறேன்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், பணத்தை முதலீடு செய்வது என்று பொருள் அல்ல; நேர்மையையும் முதலீடு செய்யலாம். அதைத் தான் அவ்வாறு கூறினேன். அதற்கான முயற்சியில்தான் மக்கள் நீதி மய்யம் இறங்கியுள்ளது” என்றார்.

திமுக கூட்டணியில் சேருவது குறித்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த கமல், “2021ல் திராவிட கட்சிகளை தவிர்த்து பிற கட்சிகள் எங்களுடன் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மக்கள் மனதில் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. அதற்குத் தகுதியானவரை மக்கள் தேர்வுசெய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிற்கு உதவ வேண்டிய கடமை ரஜினிக்கு உண்டு'

Intro:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாதது பின்னடைவு இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.Body:திருச்சி:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாதது பின்னடைவு இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சங்கம் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் கமல்ஹாசன் சென்னையிலிருந்து திருச்சி வந்தார். திருச்சி சங்கம் ஹோட்டலில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
பின்னர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் கணேசபுரத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் மூன்றாவது தலைமையக அலுவலகத்தை அதன் தலைவர் கமலஹாசன் இன்று திறந்து வைத்தார்.

அப்போது கமல்ஹாசன் பேசுகையில்.
கட்சி தொண்டர்கள் தலைமையை நோக்கி வருவதை தவிர்த்து தலைமை தொண்டர்களை நோக்கி வருவதற்கு தான் இந்த தலைமை அலுவலகம். தலைமை என்பது மக்களிடம் உள்ளது என்பதை நம்ப வேண்டும். நான் நேர்மையாக பேசிய காலம் போய் அதை பறைசாற்றும் காலம் வந்துவிட்டது.
தமிழகத்தில் நல்ல எண்ணம் இல்லாதவர்களிடம் நம் நேர்மையை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தான் என் நம்பிக்கை. நீங்கள் கேட்கலாம் இப்படி கூறும் நான் ஏன் முன்கூட்டியே அரசியலுக்கு வரவில்லை என்று. தலை குனிவாகத்தான் இருக்கிறது.
நான் நீண்டகாலம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. நேர்மையை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல வாக்காளர்களுக்கும் கற்றுக் கற்றுக் கொடுக்க முடிவு செய்யுங்கள். தமிழகம் வளர்ச்சி அடைந்துவிடும்.
என்னுடன் கட்சி நிர்வாகிகள் பலரும் இங்கு வந்துள்ளனர். கட்சிக்காரர்கள் கூடி இருக்கின்றதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இது பட்டிதொட்டி வரை சென்று அடைவது தான் எனது இலக்கு. அதை நினைத்து செயல்பட்டால் நிச்சயம் நாளை நமதே என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எங்கள் இலக்கு 2021ஆம் ஆண்டு என்ற பயணத்துக்கான படிக்கட்டாக திருச்சியிலும் தலைமை அலுவலகத்தை தொடங்கியுள்ளோம்.
தலைமையை நோக்கி மக்கள் வர வேண்டும் என்பதை தவிர்த்து, மக்களை நோக்கி தலைமை செல்ல வேண்டும். அதற்கான ஆரம்பம் தொடங்கியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாதது கட்சிக்கு பின்னடைவு இல்லை.
திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
வாக்கு அளிக்க பணம் அளிக்க மாட்டோம். நேர்மையாக இருப்பது எல்லா காலத்திலும் சாத்தியம். விரும்புவர்கள் பின்பற்றலாம். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றார்.
ரஜினியின் தர்பார்
படத்தில் சசிகலா பற்றிய வசனம் இடம் பெற்றிருப்பது குறித்த கேள்விக்கு கமல் பதில் கூறுகையில், இது பராசக்தி காலத்திலிருந்தே தொடர்கிறது. இதைப் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

நடிகர் ரஜினி தமிழகத்தில் முதலீடு செய்யவேண்டும் என்று கூறி உள்ளீர்களே, இதற்கு என்ன அர்த்தம் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு கமல் பதில் கூறுகையில்,
உங்களிடம் சொல்லுவதை தான் அவரிடம் சொன்னேன். அவரை எங்களது கட்சியில் சேர சொல்லவில்லை. முயற்சியில் சேருங்கள் என்கிறேன்.
தமிழகத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் என்றால் பணம் மட்டும் அல்ல. நேர்மையை முதலீடு செய்யலாம்.
அதற்கான முயற்சியில் மக்கள் நீதி மய்யம் இறங்கியுள்ளது என்றார்.
திமுக கூட்டணியில் சேருவது குறித்து குறித்த கேள்விக்கு கமல் பதில் கூறுகையில்,

திமுக கூட்டணியில் சேருவதா? என்பதை நாங்கள் தான் சொல்ல வேண்டும். வேறு யாரோ முடிவு செய்வதில்லை. 2021ல் திராவிட கட்சிகளை தவிர்த்து பிற கட்சிகள் எங்களுடன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெற்றிடம் என்று கூற முடியாது. மக்கள் மனதில் தலைமைக்கான இடம் உள்ளது. அதற்கு தகுதியானவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.