ETV Bharat / state

'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான்' என மத்திய அரசு செயல்படக் கூடாது!

திருச்சி: புதிய கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதில் சீர்திருத்தம் செய்து தமிழ்நாட்டில் அமல்படுத்த மத்திய அரசு முயற்சிக்க கூடாது என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 30, 2019, 7:35 PM IST

மத்திய அரசு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதைப் போல் புதிய கல்விக் கொள்கையை சீர்திருத்தம் செய்து தமிழ்நாட்டில் அமல்படுத்த முயற்சிக்கக் கூடாது.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்

மாப் லின்சிங் (mob lynching) செயல்களால் இதுவரை 272 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 247 பேர் இஸ்லாமியர்கள். எனவே தனி நபர் மீதான தாக்குதல்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு அதிமுக அரசின் தோல்வி பயமே காரணம்' என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதைப் போல் புதிய கல்விக் கொள்கையை சீர்திருத்தம் செய்து தமிழ்நாட்டில் அமல்படுத்த முயற்சிக்கக் கூடாது.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்

மாப் லின்சிங் (mob lynching) செயல்களால் இதுவரை 272 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 247 பேர் இஸ்லாமியர்கள். எனவே தனி நபர் மீதான தாக்குதல்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு அதிமுக அரசின் தோல்வி பயமே காரணம்' என்றார்.

Intro:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.


Body:திருச்சி:
தோல்வி பயம் காரணமாகவே தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த வில்லை என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
வடக்கு மாவட்ட தலைவர் அப்துல்வகாப் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்திற்கு பின்னர் காதர்மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் மத்திய அரசு தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை முற்றிலும் திரும்ப பெற வேண்டும். அதில் சீர்திருத்தங்கள் செய்து அமல்படுத்த முயற்சிக்கக் கூடாது. நாட்டில் கும்பலாக சேர்ந்து தனி நபரை அடித்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு காலதாமதமின்றி இவ்விஷயத்தை கவனிக்க வேண்டும்.
தோல்வி பயம் காரணமாகவே தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த வில்லை. அரசின் திட்டங்கள் நேரடியாக அமைச்சர்கள் மூலமே மக்களை சென்று அடைய வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள் மூலம் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முன்வரவில்லை. இது போன்ற காரணங்களால் தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வோம். எங்களுக்கு சில தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அது போன்ற நகராட்சி, பேரூராட்சி, வார்டுகளை கூட்டணியில் கேட்டுப் பெறுவோம் என்றார்.


Conclusion:உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று காதர்மொய்தீன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.