ETV Bharat / state

‘மக்களின் நம்பிக்கையை நீதிபதிகள் காப்பாற்ற வேண்டும்’ - தலைமை நீதிபதி தகில் ரமணி

author img

By

Published : Jul 17, 2019, 10:18 AM IST

திருச்சி: தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை அமைத்து மக்களுக்கு எளிதாக நீதி கிடைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தலைமை நீதிபதி தகில் ரமணி கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி தகில் ரமணி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தைச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமணி திறந்து வைத்தார். மேலும் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி, ஜெயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ”திருச்சி தலைசிறந்த கல்வியை வழங்கிவரும் இடமாகவும், சரித்திரப் புகழ்பெற்ற இடமாகவும் திகழ்கிறது. திருச்சியில் அமைந்துள்ள நீதிமன்றம் மிகவும் பழமையானது மட்டுமல்லாமல் நல்ல திறமைகளை உருவாக்கிய பெருமை பெற்றது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமணி

பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கிணங்க நீதிபதிகள் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும். வழக்கறிஞர்கள் அரசியல் சட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை அமைத்து மக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் நீதி கிடைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இளம் வழக்கறிஞர்கள் பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தாமல் மூத்த வழக்கறிஞர்களிடம் தொழில் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என கூறினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தைச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமணி திறந்து வைத்தார். மேலும் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி, ஜெயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ”திருச்சி தலைசிறந்த கல்வியை வழங்கிவரும் இடமாகவும், சரித்திரப் புகழ்பெற்ற இடமாகவும் திகழ்கிறது. திருச்சியில் அமைந்துள்ள நீதிமன்றம் மிகவும் பழமையானது மட்டுமல்லாமல் நல்ல திறமைகளை உருவாக்கிய பெருமை பெற்றது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமணி

பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கிணங்க நீதிபதிகள் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும். வழக்கறிஞர்கள் அரசியல் சட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை அமைத்து மக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் நீதி கிடைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இளம் வழக்கறிஞர்கள் பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தாமல் மூத்த வழக்கறிஞர்களிடம் தொழில் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என கூறினார்.

Intro:இளம் வழக்கறிஞர்கள் பணம் சம்பாதிப்பதை கவனம் கொள்ளாமல் தொழில் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் தகில்ரமணி பேச்சுBody:தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை அமைத்து மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் நீதிகிடைக்க சென்னை உயர்நீதிமன்றம் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது - மணப்பாறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர். தகில்ரமணி பேச்சு.

திருச்சிமாவட்டம் மணப்பாறையில் குளித்தலை சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர். தகில் ரமணி திறந்து வைத்தார்.

மேலும் தனியார் மகால் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சியில் நீதிபதிகள் குடியிருப்பு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு, துறையூரில் நீதிபதிகள் குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழாவை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்... திருச்சி தலைசிறந்த கல்வியை வழங்கிவரும் இடமாகவும், அதுபோல சரித்திர புகழ்பெற்ற இடமாகவும் திகழ்கிறது. முன்பு திருச்சியை தமிழகத்தின் தலைநகராக்க உத்தேசிக்கப்பட்டது திருச்சியில் அமைந்துள்ள நீதிமன்றம் மிகவும் பழமையானது மட்டும் அல்லாமல் நல்ல திறமைகளை உருவாக்கிய பெருமைபெற்றது.

பொதுமக்கள் நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கைவைத்து நீதிபெற வருகிறார்கள், அந்த எதிர்பார்ப்புக்கு இணங்க நீதிபதிகள் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும், வழக்கறிஞர்கள் அரசியல் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கோட்பாடுகளை கட்டிக்காக்கவேண்டும், தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை அமைத்து மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் நீதிகிடைக்க சென்னை உயர்நீதிமன்றம் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இளம் வழக்கறிஞர்கள் பணம் சம்பாதிப்பதை கவனம் கொள்ளாமல் மூத்த வழக்கறிஞர்களிடம் தொழில் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி உள்ளிட்ட நீதிபதிகள் திருச்சி, அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.