ETV Bharat / state

24 மணிநேரமும் மது, கஞ்சா விற்பனை படுஜோர்...! - மணப்பாறையில் 5 பேர் கைது - latest crime news tamilnadu

திருச்சி: மணப்பாறை நகர் பகுதிகளில் 24 மணிநேரமும் மதுபாட்டில்கள், கஞ்சா விற்பனை செய்துவந்த ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

trichy
author img

By

Published : Sep 23, 2019, 2:06 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர் பகுதியில் 24 மணிநேரமும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் மணப்பாறை நகர் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்துவந்த ராஜா, வெள்ளைச்சாமி, விஜயகுமார் ஆகிய மூவரும் காவல் துறையினரிடம் கையும் களவுமாகச் சிக்கினர். மேலும் அவர்களிடமிருந்த 284 மதுபாட்டில்களும் ரூ.7720 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் அன்று மாலை காவல் கண்காணிப்பாளரின் நேரடி தனிச் சிறப்புக் குழு காவல் படையினர் மணப்பாறை பூங்கா சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த மகாலட்சுமி, நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

மணப்பாறையில் மது, கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது

அவர்களிடமிருந்த 1,600 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.10,880-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

வழிப்பறி, கஞ்சா விற்பனை அமோகம்... 13 பேரை சுற்றிவளைத்துப் பிடித்த காவல்துறையினர்!

கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர் பகுதியில் 24 மணிநேரமும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் மணப்பாறை நகர் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்துவந்த ராஜா, வெள்ளைச்சாமி, விஜயகுமார் ஆகிய மூவரும் காவல் துறையினரிடம் கையும் களவுமாகச் சிக்கினர். மேலும் அவர்களிடமிருந்த 284 மதுபாட்டில்களும் ரூ.7720 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் அன்று மாலை காவல் கண்காணிப்பாளரின் நேரடி தனிச் சிறப்புக் குழு காவல் படையினர் மணப்பாறை பூங்கா சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த மகாலட்சுமி, நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

மணப்பாறையில் மது, கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது

அவர்களிடமிருந்த 1,600 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.10,880-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

வழிப்பறி, கஞ்சா விற்பனை அமோகம்... 13 பேரை சுற்றிவளைத்துப் பிடித்த காவல்துறையினர்!

கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது

Intro:மணப்பாறையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கஞ்சா விற்ற 5 பேர் கைது- தனிப்படை போலீசார் அதிரடி.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுவதாகவும், கஞ்சா விற்பனையும் அதிக அளவில் நடைபெறுவதாகவும் மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல்ஹக் உத்தரவின்பேரில் ஞாயிற்றுக்கிழமை காலை காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மணப்பாறை நகர் பகுதியில் மூன்று இடங்களில் அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்றது கையும்களவுமாக பிடிப்பட்டது. ராஜா என்பவரிடம் 88 மதுபாட்டில்கள், வெள்ளைச்சாமி என்பவரிடம் 114 மதுபாட்டில்கள், விஜயகுமார் என்பவரிடம் 52 மதுபாட்டில்கள் என சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 267 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.7720/- யை பறிமுதல் செய்த மணப்பாறை போலீஸார் ராஜா, வெள்ளைச்சாமி மற்றும் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து மாலையில் காவல் கண்காணிப்பாளரின் நேரடி தனி சிறப்பு படையான சட்டவிரோத செயல்கள் தடுப்பு சிறப்புக்குழு மணப்பாறை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டபோது, பூங்கா சாலையில் மகாலெட்சுமி மற்றும் நாகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தபோது அவர்கள் வைத்திருந்த 1600 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கம் ரூ.10,880/-யை பறிமுதல் செய்த போலீஸார், மகாலெட்சுமி மற்றும் நாகாரஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.