தமிழ்திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் மீது துறையூரைச்சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வரதராஜன் என்பவர், காசோலை மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இவ்வழக்கிற்கு மணப்பாறையைச் சேர்ந்த பாண்டி என்பவரை வழக்கறிஞராக நியமித்திருந்தார்.
இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிர் பாண்டிக்கும், பவர் ஸ்டாருக்கும் இடையில் சம்பள பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் பாண்டி சம்பளம் கேட்டதற்கு பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாக கடந்த மே மாதம் மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கறிர் பாண்டி வழக்குப் பதிவு செய்தார்.
இந்நிலையில் பவர் ஸ்டார் இவ்வழக்கில் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் மூன்றாம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டது. அத்துடன் சம்பந்தப்பட்ட மணப்பாறை காவல் நிலையத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆஜராகி காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுப்பட்டிருந்தது.