ETV Bharat / state

காவல் துறையினர் தாக்குதலால் உயிரிழந்தாரா விவசாயி?; உறவினர்கள் போராட்டம்

author img

By

Published : Dec 8, 2022, 10:10 PM IST

காவல் துறையினர் அடித்ததால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக வெளியான சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த விவசாயி! ; உறவினர்கள் போராட்டம்
காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த விவசாயி! ; உறவினர்கள் போராட்டம்

திருச்சி : அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையைச் சேர்ந்தவர் செம்பலிங்கம் (வயது 54 ). இவருக்கு மனைவியும்,ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில், அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டையில் கடந்த மாதம் 26ஆம் தேதி நடந்த ஒரு அடிதடி வழக்கில் அவரது மருமகன் அருண்குமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இதுதொடர்பாக விக்கிரமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செம்பலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் காவலர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த விவசாயி செம்பலிங்கம் அரியலூர் அரசு மருத்துவமனையில் மூன்று தினங்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பின்னர் வீடு திரும்பினார்.

ஆயினும் அவரது உடல்நிலை சரியாகாத சூழலில் நேற்று(டிச.7) செம்பலிங்கம் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை செம்பலிங்கம் இறந்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களுடன் தற்போது சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

காவல் துறையினர் தாக்கியதால் தான் செம்பலிங்கம் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்திய போலீசார் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும், மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

காவல் துறையினர் தாக்குதலால் உயிரிழந்தாரா விவசாயி?; உறவினர்கள் போராட்டம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி தனியார் மருத்துவமனை முன்பு அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு உறவினர்களிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதையும் படிங்க: 30 நாய்கள் அடித்துக் கொலை; ஊராட்சிமன்றத் தலைவியின் கணவர் உட்பட நால்வர் கைது

திருச்சி : அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையைச் சேர்ந்தவர் செம்பலிங்கம் (வயது 54 ). இவருக்கு மனைவியும்,ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில், அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டையில் கடந்த மாதம் 26ஆம் தேதி நடந்த ஒரு அடிதடி வழக்கில் அவரது மருமகன் அருண்குமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இதுதொடர்பாக விக்கிரமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செம்பலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் காவலர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த விவசாயி செம்பலிங்கம் அரியலூர் அரசு மருத்துவமனையில் மூன்று தினங்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பின்னர் வீடு திரும்பினார்.

ஆயினும் அவரது உடல்நிலை சரியாகாத சூழலில் நேற்று(டிச.7) செம்பலிங்கம் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை செம்பலிங்கம் இறந்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களுடன் தற்போது சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

காவல் துறையினர் தாக்கியதால் தான் செம்பலிங்கம் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்திய போலீசார் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும், மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

காவல் துறையினர் தாக்குதலால் உயிரிழந்தாரா விவசாயி?; உறவினர்கள் போராட்டம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி தனியார் மருத்துவமனை முன்பு அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு உறவினர்களிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதையும் படிங்க: 30 நாய்கள் அடித்துக் கொலை; ஊராட்சிமன்றத் தலைவியின் கணவர் உட்பட நால்வர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.